மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற சுதந்திரமான நீதித்துறை அவசியம் உச்சநீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 24, 2021

மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற சுதந்திரமான நீதித்துறை அவசியம் உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஜூலை 24 மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் தேவேந்திர சவுராசியா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராம்பாயின் கணவர் கோவிந்த் சிங்குக்கு வழங்கப்பட்ட பிணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு   விசா ரித்தது.அப்போது நீதிபதிகள், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்றால் சுதந்திரமான நீதித்துறை அவசியம். மாவட்ட நீதி பதிகளை பாதுகாக்க வேண்டும். அரசியல்  நெருக்கடிகளில் இருந்து நீதித்துறையை பாதுகாக்க வேண்டும். வசதி படைத்த, அதிகாரம் மிக்கவர்களுக்கும், சாமானியர் களுக்கும் என இருவேறு நீதிமுறைகள் இருக்க முடியாது என கருத்து தெரிவித்தனர்.

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் தேவேந்திர சவுராசியா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராம் பாயின் கணவர் கோவிந்த் சிங்குக்கு வழங் கப்பட்ட பிணையை ரத்து செய்து உத்தர விட்டனர்.

No comments:

Post a Comment