தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 25, 2021

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்

 ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடில்லி, ஜூலை 25- தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் முன் னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். பெகாசஸ் மென் பொருள் மூலம் தனது தொலைபேசியும் உளவு பார்க் கப்பட்டதாகவும் மேலும் அவர் குற்றச் சாட்டியுள்ளார்.

டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் பிரதமர் மோடியின் பங்கு குறித்து நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். என்னுடைய அலைபேசி உளவு பார்க்கப்பட்டுள்ளது. உளவுத் துறை அதிகாரிகள் என்னைத் தொடர்பு கொண்டு உங்கள் அலைபேசி உளவு பார்க்கப்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறார்கள். என்னுடைய பாது காப்பு குறித்த கேள்வி மட்டுமல்ல; அனைவரின் தனியுரி மையும் கேள்விக்குறியாகியுள்ளது. ஒரே வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இதற்குப் பெயர் துரோகம் என் பதைத் தவிர வேறொன்றுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment