சென்னை, ஜூலை 30- ஊரடங்கு காலத்தில் உயிரிழந்த தோழர்களுக்கு ஆவடி பெரியார் மாளிகையில் படத்திறப்பு நடைபெற்றது.
ஆவடி மாவட்டத்தில், கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக மேனாள் மாவட்டச் செயலாளர் இல. குப்புராசு (24.04.2021), மேனாள் பொதுக்குழு உறுப்பினர் மா.ஆ.கந்தசாமி (10.05.2021), பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டத் தலைவர் பா. இரா. ராமதுரை (22.05.2021), ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அத்தோடு மேனாள் செயலாளர் சிவக்குமாரின் தந்தை சுப்பிரமணி, மாவட்ட தலைவர் பா.தென்னரசுவின் தாய் பா.பவுனம்மாள், அம்பத்தூர் தோழர் ராமலிங்கத்தின் தாயார் பூ.ராஜம்மாள், பேராசிரியர் முருகானந்தம் ஆகிய நான்கு தோழர்களும் உயிரிழந்திருந்தனர்.
ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, கடந்த 25.07.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு,மாவட்டக் கழகத்தின் சார்பில், ஆவடி பெரியார் மாளிகையில் எழு வருக்குமான நிகழ் வாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, குறிப்பிட்டபடி நடைபெற்ற நிகழ்வில் எழுவரின் குடும்பத் தினரும், இயக்கத் தோழர்களும் வருகை தந்து எழுவரின் படங்களுக்கும் மலர்கள் தூவி தங்களின் வீரவணக்கத்தைச் செய்தனர்.
மாவட்டத் தலைவர் பா.தென்னரசு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் நிகழ்ச்சி யின் நோக்கம் குறித்தும், படங்களாகிவிட்ட தோழர்களின் அருமையைக் குறிப்பிட்டும் உரையாற்றினார். மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், மாவட்ட இளைஞரணித் தலை வர் வெ.கார்வேந்தன், மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், துணைத் தலைவர் பா. முத்தழகு, துணைச் செயலாளர் பூவை. தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர்
சே.மெ.மதிவதனி, தி.மு.க. தலைமைக் கழக சொற் பெருக்காளர் க.மு.ஜான், ம.தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் அந்திரி தாஸ் ஆகியோர் படங்களைத் திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினர். இறுதியாக ஆவடி நகர கழகச் செயலாளர் கோ.முருகன் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார். மாவட்டக் கழகத்தின் சார்பில் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உணவுக்குப் பிறகு, மாவட்டத் தலைவர் பா.தென்னரசு தலைமையில் ஆவடி மாவட்ட பொறுப்பாளர்கள் மட்டும் கலந்து கொண்ட மாவட்ட கலந்துரையாடல் அதே அரங்கில் நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம் ஆவடி நகரக் கழகத்திற்குத் தலைவராக
கோ.முருகன், செயலாளராக தமிழ்மணி ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளதாக அறிவித்தார்.
No comments:
Post a Comment