சென்னை, ஜூலை30- பெண் அய்பிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் 400 பக்க குற்றப் பத்திரிகையை சிபிசிஅய்டி காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாள ரான பெண் அய்பிஎஸ் அதிகாரி ஒருவர், கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய முதல மைச்சரின் பாதுகாப்புப் பணியில் இருந் துள்ளார். மேலதிகாரியான சிறப்பு டிஜிபி தனது மாவட்டத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாக அவரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தித்துள்ளார். அப்போது அந்த பெண் கண்காணிப்பாளரை காரில் ஏறச் சொன்ன சிறப்பு டிஜிபி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் குறித்து அப் போதைய டிஜிபி மற்றும் உள்துறைச் செயலரிடம் அந்தப் பெண் அய்பிஎஸ் அதிகாரி புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலாளர் தகுதியில் உள்ள பெண் அலுவலர் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப் பட்டது.
இதைத் தொடர்ந்து சிறப்பு டிஜிபி பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது சிபிசிஅய்டி காவல்துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு விழுப் புரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடந்து வருகிறது.
இதனிடையே, இவ்வழக்கை சிபிஅய்க்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரானவழக்குரைஞர், ‘‘புகார் குறித்த விசாரணையை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண் காணித்து வருகிறார். விசாரணையில் ஏற் படும் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கையும் தாக்கல் செய்து வருகிறோம். மேலும், காவல் துறை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாகா கமிட்டியின் அறிக்கையையும்அரசிடம் சமர்ப்பித்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
‘‘புகார் மீதான விசாரணை தொடர்பாக தனி நீதிபதி கண்காணித்து வருவதால், மேற் கொண்டு சிபிஅய் விசாரணைக்கு அவசியம் இல்லை’’ என கூறி வழக்கை முடித்து வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த உத்தரவு தற்போதைய விசாரணையில் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தெளிவுப்படுத்தினர்.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றம் எண் 2இல், நடுவர் முன்பு பாதிக்கப்பட்ட பெண் அய்பிஎஸ் அதிகாரி ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந் தார். இந்நிலையில், சிபிசிஅய்டி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான காவல்துறையினர் விழுப்புரம் தலைமை குற்றவியல்நடுவர் மன்றத்தில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நேற்று (29.7.2021) தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபிக்கு உதவி செய்ததாக 3 அய்பிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி இருப்ப தாக கூறப்படுகிறது.
பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி, 14 சாட்சி களிடம் விசாரணை நடத்தியது. விசாகா கமிட்டியின் முதல்கட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிறப்புடிஜிபி மற்றும் அவருக்கு உதவி செய்த அய்ஜி, டிஅய்ஜி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மீது துறை ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவர்கள் அனைவரும் அய்பிஎஸ் அதிகாரிகள் என்ப தால் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் அனு மதி கேட்டு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சக அனுமதி கிடைத்ததும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி கிறது.
No comments:
Post a Comment