அமைச்சர் சி.வி.கணேசன் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 16 வேலை வாய்ப்பை அதிகரிக்க திறன் மேம்பாட்டு பயிற்சி மிகவும் அவசியம் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் வலியுறுத்தினார்.
ஆண்டுதேறும் ஜூலை 15ஆம் தேதி உலக இளைஞர் திறன் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு, பயிற்சி இயக்ககத்தில் நேற்று (15.7.2021) விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் காணொலி வாயிலாக கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசிய தாவது:
இளைஞர்களின் வேலைவாய்ப்பை பெருக் கும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக பல்வேறு குறுகியகால பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பை அதிகரிக்க இளைஞர்க ளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மிகவும் அவசியம். அரசால் அளிக்கப்படும் திறன் பயிற்சிகளில் இளைஞர்கள் தங்களுக்கு தேவையான பயிற்சி எது என்பதை கண்டறிய வேண்டும். இந்த பயிற்சி களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை யும் வழங்குகிறது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது. இங்கு இலவச பயிற்சியுடன் பல் வேறு நலத்திட்ட உதவி களும் வழங்கப்படுகின் றன. அவற்றை மாணவர் கள் நல்ல முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண் டும்.
இவ்வாறு அமைச்சர் கணேசன் கூறினார்.
No comments:
Post a Comment