இராமலிங்கர் சொன்னார் என்றால் நல்ல கருத்துகளை எல்லாம் சொல்லி இருக்கின்றார். மதத்தை - ஜாதியைக் கண்டித்து இருக்கிறார். சாத்திரங்களை எல்லாம் குப்பைக் கூளம் என்று கூறியுள்ளார். "எல்லாம் திருட்டுப் பசங்கள் ஏற்பாடாகும்; சிறுபிள்ளை விளையாட்டு" என்று எல்லாம் கூறியிருக்கிறார். இதை எந்த இராமலிங்கசாமி பக்தன் நினைக்கின்றான்? சும்மா மொட்டை அடித்துக் கொண்டு கொட்டைக் கட்டிக் கொள்கிறானே ஒழிய, இதை எல்லாம் சிறிதேனும் உணருகின்றானா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment