ஈரோடு,ஜூலை21- அரசு கேபில் டி.வி. நிறுவனத் தின் தலைவர் குறிஞ்சி சிவகுமார் வெளியிட் டுள்ள அறிவிப்பில், அரசு கேபிள் டி.வி.யில் புதிதாக 30 சேனல்கள் இ¬ ணக் கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஈரோட் டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய சேனல் கள் இணைக்கப்பட்டா லும், பழைய கட்டணத்தி லேயே சேவைகள் தொட ரும் என தெரிவித்தார். அத்துடன் ஈரோடு மாவட் டத்தில் சுமார் 23 ஆயிரம் செட்-டாப் பாக்ஸ்கள் பயன்பாட்டில் இல்லை என குறிப்பிட்ட அவர், பயன்பாட்டில் இல்லாத செட்-டாப் பாக்ஸ்கள் மீது ஆப்பரேட்டர்களுக்கும், அதி காரிகளுக்குமே பொறுப்பு என்று தெரிவித்தார்.
எனவே செட்-டாப் பாக்ஸ்களை திரும்ப பெற்று ஒப்படைக்கவில்லை என்றால், உரிய கட்டண விலை வசூலிக்கப்படும் என அவர் எச்சரித்துள் ளார். அதே போல சில ஆப்பரேட்டர்கள் தனி யார் செட்-டாப் பாக்ஸ் களை விற்பதாக புகார் வந்துள்ளதாகவும், கண் டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment