ரேசன் கடைகளில் வெளியாட்களை அனுமதித்தால் குற்ற நடவடிக்கை. - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
எட்டரை லட்சம்!
தமிழ்நாட்டுக்கு எட்டரை இலட்சம் தடுப்பூசி விமானம்மூலம் வந்தடைந்தது.
பலே பலே!
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்களின் சேர்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது.
600 கி.மீ.
மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் ஓடும் அதிவேக காந்த ரயில் சீனாவில் அறிமுகம்.
புலியை விரட்டிய ‘‘புலி!''
மகாராட்டிர மாநிலம் ஜீனோனோ கிராமத்தில் தன் மகளைக் கவ்விப் பிடித்த புலியைக் கல்லால் அடித்து விரட்டினார் தாய் அர்ச்சனா!
அறிவிப்பு
அக்டோபர் ஒன்றாம் தேதி புதிய கல்வியாண்டு தொடங்குவதாக யு.ஜி.சி. அறிவிப்பு.
அரியலூர்
மாணவிகள்
அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசுப் பள்ளி மாணவிகள் ரகசியா, வேதாசிறீ ஆகியோர் ருசியாவில் நடக்கும் விண்வெளிப் பயிற்சியில் பங்கேற்கத் தேர்வு!
ஊடகங்கள்....
கரோனா போன்ற விவகாரங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுவதன் வழி சமூக ஊடகங்கள் மனிதர்களைக் கொல்லுகின்றன - கூறுகிறார் அமெரிக்க அதிபர் ஜோபைடன்.
No comments:
Post a Comment