மருத்துவக் கல்வி: அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% முதற்கட்ட வெற்றியே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

மருத்துவக் கல்வி: அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% முதற்கட்ட வெற்றியே!

69%  சட்டப்படி - தீர்ப்புப்படி இட ஒதுக்கீடு கிடைப்பதற்குப் போராடுவோம்-ஒன்றிணைந்து செயல்பட்ட முதலமைச்சர் மற்றும் அனைவருக்கும் நன்றி!

முழு வெற்றி கிட்டும்வரை நமது போராட்டம் தொடரும்!

மருத்துவக் கல்வியில் முதுநிலைப் பட்டப் படிப்பில் 27% இட ஒதுக்கீடு அளிக்க ஒன்றிய அரசு முன் வந்துள்ளது முதற்கட்ட வெற்றியே! 69% அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை நமது போராட்டம் தொடரும்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது  அறிக்கை வருமாறு:

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவைப் பயன்படுத்தி, மருத்துவக் கல்வி வசதிகள் வளர்ச்சி பெறாத வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களில் உள்ளவர்கள் மருத்துவர்களாவதற்கு உதவும் வகையில், உச்சநீதிமன்றம், மருத்துவக் கல்வியில் வளர்ச்சி அடைந்த மாநிலங்கள்மத்திய தொகுப்பு' என்ற ஒன்றை உருவாக்கி, தங்களுக்குள்ள மொத்த மருத்துவப் படிப்புக் கான இடங்களில் - எம்.பி.பி.எஸ். போன்ற பட்டப் படிப்பிற்கான 15 சதவிகிதமும், மேல் பட்டப் படிப்பிற்கான (எம்.டி., எம்.எஸ். போன்றவை) 50 சதவிகிதமும் (முதலில் 25 சதவிகிதம், பிறகு 50 சதவிகிதம்) ஆண்டுதோறும் தரவேண்டும் என்ற ஒரு ஆணையைப் பிறப்பித்து, அது அமலில் இருந்து வருகிறது.

அவ்வாறு மத்திய தொகுப்பின்மூலம் பெறப்பட்ட இடங்களை ஒன்றிய அரசு - ஒதுக்கீடு முறையில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று ஆணையிட்டது உச்சநீதிமன்றம்.

ஒன்றிய அரசின் தவறான முடிவு!

ஒன்றிய அரசு, ஒதுக்கீடு முறையில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கவேண்டும் என்பதை, முழுமையாக செய் யாமல், (2008) முந்தைய, இன்றைய ஒன்றிய அரசுகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் (எஸ்.சி., எஸ்.டி.,) என்ற பிரிவுக்கு மட்டும் அமல்படுத்திவிட்டு  (அதையும் முழு மையாகப் பின்பற்றியுள்ளார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி) .பி.சி. என்ற இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு அளிக்காமலே, இதை நடைமுறைப்படுத்தி, உயர்ஜாதியினரே எஞ்சிய எல்லா மருத்துவ இடங்களை யும் ஏகபோகமாக அனுபவித்த கொடுமை தொடர்ந்தது!

சலோனா குமாரி என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய மருத்துவர் - இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு இந்த அநீதிக்குப் பரிகாரம் தேட, அப்பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது! (2015).

இதற்கிடையில் எத்தனையோ சம்பவங்கள் - சட்டப் பிரச்சினைகள் என்றாலும், ‘நீட்' தேர்வு என்று திணிக் கப்பட்டுள்ள இந்த தேர்வு வந்த பிறகு - 2016 இல் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் திருத்தப்பட்டது. (பிரிவு 10-D கொண்டு வரப்பட்டது.) அதன்கீழ் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை(Notification) 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ‘தேசிய மருத்துவ ஆணையச் சட்டம்' 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டது.

அதன்படி இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத் தின்கீழ் தரப்பட்ட அறிவிக்கைகள் தொடரிலும்

(21.12.2010) - அந்த அறிவிக்கையில் இட ஒதுக்கீடு அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டங்களின்படியே தொடரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இவை எல்லாம் எந்த அல்லல்பாட்டுக்கும் இடமில்லாமல், சட்டத்திலும், விதிகளிலும் கண்டுள்ளன!

இதைச் செயல்படுத்தாமல் - பிற்படுத்தப்பட்ட சமூக மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடே - மத்திய தொகுப்பில் தராத கொடுமை தொடர்ந்து வந்தது.

இதை திராவிடர் கழகம் (‘விடுதலை'யில்) முதல் முதலில் அறிக்கையாக வெளியிட்டது. இந்த சமூக அநீதியை அம்பலப்படுத்தியது! (8.5.2020, 16.5.2020).

சமூக அநீதிக்கு எதிராக ஒன்றாக திரண்ட தமிழ்நாடு!

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நிலை யில்,  தி.மு.., அதன் தலைவர் தளபதி தி.மு.. ஸ்டாலின் அவர்களும் அறிக்கை வெளியிட்டு, அனைத்து ஒத்தக் கருத்துள்ள அரசியல் கட்சிகளும் (பா... தவிர), சமூக அமைப்புகளும் ஓரணியில் திரண்டன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த சமூக அநீதிக்குப் பரிகாரம் தேட வழக்குத் தொடர்ந்தோம்!

இந்த வழக்கு அந்நாளைய தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி இராமமூர்த்தி ஆகியோர் அமர்வுமுன் விசார ணைக்கு வந்தது!

தி.மு..வின் சார்பில் மூத்த வழக்குரைஞர் வில்சன் அவர்களும், தி..வின் சார்பில் மூத்த வழக்குரைஞர் தியாகராஜன் அவர்களும், அதுபோல பல அரசியல் கட்சியினரும் தனித்தனியே வழக்குகளைத் தொடுத் தனர்.

ஆளுங்கட்சியாக அப்போது .தி.மு..வும், தமிழ்நாடு அரசும்கூட இறுதியில் இணைந்தது.

தமிழ் மண் - சமூகநீதி மண் - பெரியார் மண் என்பது உலகுக்கே பளிச்சிட்ட நிலையில், விவரமாக கேட்டு தீர்ப்பளித்த தலைமை நீதிபதி (பிறகு அவர் ஓய்வு பெற்றார்) அமர்வு தெளிவான தீர்ப்பளித்தது.

69 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதே சரியானது - சட்டப்படியானது!

1. மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.

2. சென்னை உயர்நீதிமன்றம் -அவர்களே ஒப்புக் கொண்டபடி ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை - தமிழ்நாட்டில் 1993 ஆண்டு 9 ஆம் அட்டவணைப் பாதுகாப்பில்  சட்டமாகி, அமலில் உள்ளபடி 69 சத விகிதப்படி இடங்களை பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அளிக்கவேண்டும் என்று கூறியது. ஒரு கமிட்டி அமைத்து மூன்று மாதங்களில் தர ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது. அவ்வாண்டு ஓடிய நிலையில், வரும் 2021 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தவேண்டும் என்று தெளிவுபடுத்தியது.

அதற்குப் பிறகு ஒன்றிய அரசின் மருத்துவ சுகாதாரத் துறை ஏதேதோ சாக்குப் போக்குகளைக் கூறி, பிற்படுத் தப்பட்டவர்களின் உரிமையை ஏற்க மறுத்தே வந்தது.

ஒரு கட்டத்தில், எஸ்.சி., எஸ்.டி.,யினருக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு என்றும்கூட கூறத் தயங்கவில்லை!

அதன் பிறகு தி.மு.., நீதிமன்ற அவமதிப்பு என்ற வழக்கைத் தொடுத்ததில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒரு மாதத்திற்குள் ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை பதில் அளிக்கவேண்டும் என்று கண்டிப்பான ஆணை வெளியிட்டது. அதன் பின்னும் அசையவில்லை. மறுமுறை மேலும் அவகாசம் கேட்ட போது, மீண்டும் ஒரு மாதம் அவகாசம் தந்து, அதற்குள் முடிவு தெரிவிக்க கண்டிப்பான உத்தரவு போட்டது.

இதற்கிடையில் தமிழ்நாடு முதலமைச்சரான மு..ஸ்டாலின் அவர்கள், டில்லியில் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்துப் பேசி,  வற்புறுத்திய கோரிக் கைகளில் இதுவும் முக்கிய இடம்பெற்றது.

இதனை நாடாளுமன்றத் தி.மு.. உறுப்பினர்களும், அதன் தலைவர் டி.ஆர்.பாலுவும், மாநிலங்களவையில் அதன் தலைவர் திருச்சி சிவா, மூத்த வழக்குரைஞர் வில்சன் போன்றவர்களும் வலியுறுத்தினர்.

பிறகுதான் பிரதமர் தனது கோப்பில் இப்பிரச்சினைக்கு முக்கிய முன்னுரிமை தரக் கூறினார். அதன்படி, 27 சதவிகித இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய தொகுப்பில் மருத்துவப் படிப்பில் தரப்படும் என்பதைக் கூறி, வசதி குறைந்த ஏழைகளுக்கு, முன் னேறிய ஜாதியினருக்கு பத்து விழுக்காடு ஒதுக்கீட்டையும் இணைத்தே அறிவித்தார்.

(.பி. போன்ற சில மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் உயர்ஜாதி, பிற்படுத்தப்பட்ட ஆகிய இரு சாரர்களின் வாக்கு வங்கி களைக் குறி  வைத்தது என்பது வெள்ளிடை மலை).

இது முழு வெற்றியல்ல!

தமிழ்நாட்டிற்கும், சமூகநீதிக்கும் கிடைத்த வெற்றி இது என்றாலும், முழு வெற்றி அல்ல. இது மறைக்கப்படக் கூடாத உண்மையாகும்!

69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி, தமிழ்நாட்டிற்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 விழுக்காடு தருவதற்குப் பதில், 50 சதவிகிதப்படியே - 27 விழுக்காடுதான் தர ஒப்புக் கொண்டுள்ளார்கள்!

இது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை முழுமையாக செயல்படுத்தியதாகாது என்றாலும்கூட, மூடப்பட்ட சமூகநீதிக் கதவு பிற்படுத்தப்பட்டோருக்கு கொஞ்சம் திறக்கப்பட்டிருக்கிறது - முழுமையாக அல்ல என்றாலும், இது முதற்கட்ட வெற்றி. இதன் பலன் இந்தியாவிலுள்ள அனைத்துப் பிற்படுத்தப்பட்ட சமூ கங்களும் அனுபவிக்கக் கூடிய திராவிட இயக்க அருங் கொடையாகக் (தந்தை பெரியாரால் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்த கொடைபோல) கொள்ளலாம்! ஒன்றிய அரசுக்கும் நன்றி!

முதலமைச்சர் உள்பட அனைவருக்கும் நன்றி!

மூடப்பட்ட கதவு திறக்கப்பட்டுள்ளது, தொடங்கப் படாத புதுக் கணக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தொடங்கப்பட்டுள்ளது!

சமூகநீதியின் ஒரு களத்தில் ஒரு பகுதி வெற்றி!

சமூகநீதிப் போராட்டக் களத்தில்  தொடர்ந்து நின்று போராட வேண்டியவர்களே நாம்!

இதற்குக் காரணமான அத்துணைக் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் குறிப்பாக தி.மு.., தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின், அரசியல் கட்சிகள் எல்லோருக்கும் நன்றி!

கிடைத்த இடங்களைவிட பறிபோன இடங்களை எண்ணினால் நெஞ்சம் பதறுகிறது. அதுகுறித்து தனியே பிறகு எழுதுவோம்!

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை      

30.7.2021            

No comments:

Post a Comment