ஜெனீவா, ஜூலை 21- உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக் கான மண்டல இயக்குந ரான மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் செய்தி யாளர்கள் சந்திப்பில் பேசினார். அவர் கூறுகையில், டெல்டா வகை கரோனா 100க்கும் மேற் பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.
அதன் பரவல் மிக விரைவில் பன்னாட்டு அளவில் அதிக பாதிப்பு களை ஏற்படுத்தும் கரோனா வகையாக ஆகக் கூடும். அனைத்து வகையான கரோனா வைரசுகளை விட இந்த டெல்டா வகையானது மிக விரைவாக பரவிவரு கிறது என அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் திட்டத்தின் வழியே 75 லட்சம் மாடர்னா வகை கரோனா தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment