நியூயார்க், ஜூலை 21- பெகாசஸ் உளவு மென் பொருளைக் கொண்டு ஆயிரக்கணக் கானோ ரின் அலைபேசித் தரவு களை ஓசையின்றி உளவு பார்த்த விவகாரம் உல கையே உலுக்கி வரும் நிலையில் இந்த மென் பொருளைத் தயாரித்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் கணக்கை அமேசான் நிறு வனம் முடக்கி வைத்துள் ளதாக அறிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இந்த உளவு மென்பொருளின் உரிமத்தை வழங்கியதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மக்களின் வரிப் பணத்தை இந்த நிறுவனம் சுருட்டிக்கொண்டு போயிருக்கிறது.
மேலும் இந்த உளவு மென்பொருளைக் கொண்டு மெகுல் சோக்சி, நீரவ் மோடி போன்றவர் களோ அல்லது தாவுத் இப்ராகிம் போன்றவர் களோ உளவு பார்க்கப் படவில்லை என்பதும் இந்த மென்பொருளை பயன்படுத்தியதன் மூலம் மக்களின் வரிப்பணத்தை தங்கள் சொந்த லாபத்திற் காக சிலர் வாரி இறைத் திருப்பதாக சமூக வலைத் தளங்களில் குற்றம் சாட் டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் வலைதளத்தைப் பயன் படுத்தி அவர்கள் கண்கா ணிக்க தீர்மானித்திருக்கும் எண்களுக்கு நம்பத்தகுந்த தகவல்களை அனுப்பி அதன் மூலம் அவர்களின் அலைபேசிகளில் உள் நுழைகிறது பெகாசஸ்.
‘ஆன்டிராய்ட்' மட்டு மன்றி ‘அய்போன்'களி லும் லாவகமாக நுழையும் பெகாசஸ், முக்கியமாக ‘அய்போனை' அமேசா னின் கிளவுட்பிரன்ட் வாயிலாகத் தாக்குகிறது.
இந்த விவரங்களை தனது தடயஆய்வு மூலம் உறுதிப்படுத்திக் கொண்ட பன்னாட்டு மன்னிப்புச் சபை, அமேசான் நிறு வனத்திடம் இதுபற்றிய விவரங்களை உறுதிப் படுத்திக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து என்.எஸ்.ஓ. மற்றும் அந்த குழும நிறுவனங்கள் சார்ந்த அனைத்து வர்த் தக இணைப்புகளையும் தங்கள் தளத்தில் இருந்து முடக்கியுள்ளது அமே சான்.
அரசாங்கங்கள் கேட் டுக்கொள்ளும் பட்சத் தில் அரசு தரும் எண் களை மட்டுமே உளவு பார்ப்பதாகக் கூறும் இந்த இஸ்ரேலிய நிறு வனம், சம்பந்தப்பட்ட எண்களுக்கு சொந்தக் காரர் மீது இதற்குமுன் ஏதாவது வழக்கு தொடுக் கப்பட்டுள்ளதா என்று கேட்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரண மாக வழங்கப்படும் எண் களை கண்காணித்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அதன் வா டிக்கையாளர்களுடன் கைகோர்த்து சுருட்டி வரு வது தற்போது அம்பல மாகியிருக்கிறது.
No comments:
Post a Comment