காந்தியாருக்கு மாட்டுக் கொட்டில் கோல்வால்கருக்குப் பூஜை அறை - புரியுதோ!
பித்தலாட்டக்காரர்கள்
கேள்வி:
‘துக்ளக்' இதழை வாசகர்கள் ஏன் படிக்கவேண்டும்?
பதில்:
அறிவாளிகளாக இருப்பவர்கள் படிக்கும் ‘துக்ளக்'கை, அறிவாளியாக விரும்பு பவர்கள் படிக்கவேண்டும்.
- ‘துக்ளக்',
16.6.2021
சிந்தனை:
பகுத்தறிவு என்றால் பித்தலாட்டம் (‘துக்ளக்', 4.3.2009) என்பதால், ‘துக்ளக்'கை அத்த கைய
அறிவாளிகள் படிக்கிறார்களோ!
‘பெரியவா(ல்)ள்!
* எல்லோரும்
படிக்கவேண்டிய புத்தகம் காஞ்சி பெரியவரின் ‘தெய்வத்தின் குரல்!'
- ‘துக்ளக்'
- 16.6.2021
>> நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொல்லும் பரந்த உள்ளமும், 'பிராமணர்களுக்காக கம்யூனலாகப்
பேசுகிறேன்' என்று தெய்வத்தின் குரலில் இருப்பதால் பார்ப்பனப் பாசம் பொங்கி பெரியவா¬(ல)ள சேவித்து
அப்படி எழுதுகிறார் குருமூர்த்தி அய்யர்வா(ல்)ள்!
காந்தியார்
சூத்திரர்தானே!
* காஞ்சி
பெரியவாள் குருஜி கோல்வால்கரை தன் பூஜை கட்டுக்குள் அழைத்துப் பேசினார்.
- ‘துக்ளக்',
16.6.2021
>> காந்தியாரை
பாலக்காட்டில் மாட்டுக் கொட்ட கையில் வைத்து தீண்டாமைக்காக வக்காலத்து வாங்கிப் பேசிய அதே சங்கராச்சாரியார் ("தமிழ் நாட்டில் காந்தி" - பக்கம் 575, 576) தான் குருஜி கோல் வால்கரை தன் பூஜை அறைக்குள் அழைத்துப் பேசி இருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் காந்தி சூத்திராள், குருஜி கோல்வால்கர் பிராமணாள்!
புரியுதோ!
பெரியவாளின்
கையில் வன்முறை வாளா?
* காந்தி
கொலை: ஆர்.எஸ்.எஸ். தடையை நீக்கச் சொல்லி டி.ஆர்.வி.
சாஸ்திரியை பெரியவர், (சங்கராச்சாரியார்) அழைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்க முயற்சி செய்யச் சொன்னார்.
- ‘துக்ளக்',
16.6.2021, பக்கம்
29)
>> வன்முறையிலே பிறந்து வன்முறையிலேயே வளர்ந்து காந்தியார் படுகொலை வரை சம்பந்தப் பட்டதால் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸைக் காப்பாற்ற முயற்சித்தவர்தான் பெரியவாளாம் - அவர் பேசினால், தெய்வத்தின் குரலாம்! அக்கிரகாரத்தின் அகராதியே தனிதான்!!
No comments:
Post a Comment