செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 12, 2021

செய்தியும், சிந்தனையும்....!

காந்தியாருக்கு மாட்டுக் கொட்டில் கோல்வால்கருக்குப் பூஜை அறை - புரியுதோ!

பித்தலாட்டக்காரர்கள்

கேள்வி: ‘துக்ளக்' இதழை வாசகர்கள் ஏன் படிக்கவேண்டும்?

பதில்: அறிவாளிகளாக இருப்பவர்கள் படிக்கும்  துக்ளக்'கை, அறிவாளியாக விரும்பு பவர்கள் படிக்கவேண்டும்.

- ‘துக்ளக்', 16.6.2021

சிந்தனை: பகுத்தறிவு என்றால் பித்தலாட்டம் (‘துக்ளக்', 4.3.2009) என்பதால், ‘துக்ளக்'கை அத்த கைய அறிவாளிகள் படிக்கிறார்களோ!

பெரியவா(ல்)ள்!

*           எல்லோரும் படிக்கவேண்டிய புத்தகம் காஞ்சி பெரியவரின்தெய்வத்தின் குரல்!'

- ‘துக்ளக்' - 16.6.2021

>>           நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொல்லும் பரந்த உள்ளமும், 'பிராமணர்களுக்காக  கம்யூனலாகப் பேசுகிறேன்' என்று தெய்வத்தின் குரலில் இருப்பதால் பார்ப்பனப் பாசம் பொங்கி பெரியவா¬() சேவித்து அப்படி எழுதுகிறார் குருமூர்த்தி அய்யர்வா(ல்)ள்!

காந்தியார் சூத்திரர்தானே!

*           காஞ்சி பெரியவாள் குருஜி கோல்வால்கரை தன் பூஜை கட்டுக்குள் அழைத்துப் பேசினார்.

- ‘துக்ளக்', 16.6.2021

 >>          காந்தியாரை பாலக்காட்டில் மாட்டுக் கொட்ட கையில் வைத்து தீண்டாமைக்காக வக்காலத்து வாங்கிப் பேசிய அதே சங்கராச்சாரியார் ("தமிழ் நாட்டில் காந்தி" - பக்கம் 575, 576) தான் குருஜி கோல் வால்கரை தன் பூஜை அறைக்குள் அழைத்துப் பேசி இருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் காந்தி சூத்திராள், குருஜி கோல்வால்கர் பிராமணாள்!

புரியுதோ!

பெரியவாளின் கையில் வன்முறை வாளா?

        காந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ். தடையை நீக்கச் சொல்லி டி.ஆர்.வி. சாஸ்திரியை பெரியவர், (சங்கராச்சாரியார்) அழைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்க முயற்சி செய்யச் சொன்னார்.

- ‘துக்ளக்', 16.6.2021, பக்கம் 29)

>>           வன்முறையிலே பிறந்து வன்முறையிலேயே வளர்ந்து காந்தியார் படுகொலை வரை சம்பந்தப் பட்டதால் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸைக் காப்பாற்ற முயற்சித்தவர்தான் பெரியவாளாம் - அவர் பேசினால், தெய்வத்தின் குரலாம்! அக்கிரகாரத்தின் அகராதியே தனிதான்!!

No comments:

Post a Comment