பரிசீலிப்பதாக ஒன்றிய அரசு பதில்
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான
இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் ஆண்டு
வருமான உச்ச வரம்பாக ரூ.15 லட்சத்தை 2015ஆம்
ஆண்டில் தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதை, விவசாயம் மற்றும் மாத வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமல் மறு ஆய்வு செய்து உச்ச வரம்புத் தொகையை உயர்த்தவும், இதர பிற் படுத்தப்பட்டோர் சான்றுக்கான ஆயுளை ஓராண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக அதிகரிக்கவும்
கோரி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரித்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், ஒன்றிய அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று அமைச்சகத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது என கூட்டமைப்பின் பொதுச்செயலாளர்
கோ.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment