ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 8, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

*   பிரதமர் மோடி அறிவித்த 10 அம்ச வளர்ச்சித் திட் டங்களை எதையும் தனது 7-ஆண்டு ஆட்சியில் செய்யவில்லை என மூத்த பத்திரிக்கையாளர் ஆகார் படேல் குறிப்பிட்டுள்ளார்.

*கேரளாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஹவாலா பண பரிமாற்றத்தை பாஜக செய்துள்ளது அம்பல மாகி வருகிறது.

* இந்தியாவில் ஜூன் 21 முதல் 18 வயதை கடந்த அனை வருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

*     நீட் தேர்வு மிகப் பெரிய அநீதி. அதனை தமிழ் நாட்டில் ரத்து செய்ய வேண்டும் என தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி தமிழ் நாடு முதல்வருக்கு வேண்டுகோள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*    அனைவர்க்கும் இலவச தடுப்பூசி என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு, உச்ச நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்திற்கும், எதிர்க்கட்சி மாநில முதல்வர்கள் கொடுத்த அழுத்தத்திற்கும் கிடைத்த வெற்றி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*    எல்லோர்க்கும் இலவச தடுப்பூசி என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பின் எதற்காக தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்க வேண்டும்? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி.

*    ஒன்றிய அரசே தடுப்பூசியை மொத்த கொள்முதல் செய்வதால் அதை மாநிலங்களுக்கு பங்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என பொருளாதாரப் பேராசிரியர் ஜான் கூறியுள்ளார்.

தி ஹிந்து:

*     கணக்கில் வராத பணத்தை கேரள சட்டமன்ற தேர்தலில் பாஜக பயன்படுத்தியுள்ளது என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

தி டெலிகிராப்:

*     இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை மே மாதத்தில் 11 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

- குடந்தை கருணா

4.6.2021

No comments:

Post a Comment