டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* பிரதமர் மோடி அறிவித்த 10 அம்ச வளர்ச்சித் திட் டங்களை எதையும் தனது 7-ஆண்டு ஆட்சியில் செய்யவில்லை என மூத்த பத்திரிக்கையாளர்
ஆகார் படேல் குறிப்பிட்டுள்ளார்.
*கேரளாவில்
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஹவாலா பண பரிமாற்றத்தை பாஜக
செய்துள்ளது அம்பல மாகி வருகிறது.
* இந்தியாவில்
ஜூன் 21 முதல் 18 வயதை கடந்த அனை வருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
* நீட் தேர்வு மிகப் பெரிய அநீதி. அதனை தமிழ் நாட்டில் ரத்து செய்ய வேண்டும் என தமிழ் நாடு
காங்கிரஸ் தலைவர் அழகிரி தமிழ் நாடு முதல்வருக்கு வேண்டுகோள்.
இந்தியன்
எக்ஸ்பிரஸ்:
* அனைவர்க்கும் இலவச தடுப்பூசி என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு, உச்ச நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்திற்கும், எதிர்க்கட்சி மாநில முதல்வர்கள் கொடுத்த அழுத்தத்திற்கும் கிடைத்த வெற்றி.
நியூ
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எல்லோர்க்கும் இலவச தடுப்பூசி என பிரதமர் மோடி
அறிவித்துள்ளார். பின் எதற்காக தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்க வேண்டும்? என காங்கிரஸ் தலைவர்
ராகுல் காந்தி கேள்வி.
* ஒன்றிய அரசே தடுப்பூசியை மொத்த கொள்முதல் செய்வதால் அதை மாநிலங்களுக்கு பங்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என பொருளாதாரப் பேராசிரியர்
ஜான் கூறியுள்ளார்.
தி
ஹிந்து:
* கணக்கில் வராத பணத்தை கேரள சட்டமன்ற தேர்தலில் பாஜக பயன்படுத்தியுள்ளது என கேரள மாநில
முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
தி
டெலிகிராப்:
* இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை மே மாதத்தில் 11 சதவிகிதமாக
அதிகரித்துள்ளது.
- குடந்தை
கருணா
4.6.2021
No comments:
Post a Comment