டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· கரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் அளிப்பது ஒன்றுதான் இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்கும் என அமெரிக்க சுகாதார நிபுணர் மருத்துவர் அந்தோனி பவ்சி தெரிவித்துள்ளார்.
· தமிழகத்திற்கு அதிகமான தடுப்பூசிகளையும், ஆக்சிஜன் விநியோகமும் மத்திய அரசு உடனடியாக அளித்திட சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கரோனா வைரஸின் பி-1617 மாறுபாடு உலக அளவில் "கவலை அளிக்கத்தக்க வைரஸ் மாறுபாடு" என உலக சுகாதார அமைப்பால் (கீபிளி) வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் கோவிட்-19 தொழில்நுட்ப முன்னணி டாக்டர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்தார்.
· அடையாளம் காணப்படாத டஜன் கணக்கான கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் கங்கையில் மிதந்து வருவதால் பீகாரில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
பி.பி.சி. நியூஸ் தமிழ்:
· புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கரோனா பாதிப்பால் சென்னையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அம் மாநிலத்திற்கு பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இதன் மூலம் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 6இல் இருந்து 9 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி யில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளில் வென்றுள்ளது.
- குடந்தை கருணா
11.5.2021
No comments:
Post a Comment