கழக வீராங்கனை - சுப்புலட்சுமிபதிக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 14, 2021

கழக வீராங்கனை - சுப்புலட்சுமிபதிக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!

ஒருங்கிணைந்த கீழத்தஞ்சை மாவட்டத்தில் துணைவரும் துணைவியருமாக ஒளிவீசி இயக்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கு பெற்று எடுத்துக்காட்டான இணையர்களாக விளங்கிய வர்கள் பருத்தியூர் வி.எம்.ஆர்.பதி - சுப்புலட்சுமி ஆவர். மானமிகு சுப்புலட்சுமி (வயது 75) அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.

கீழ்த்தஞ்சை மாவட்டம் கழக மகளிரணி தலைவராக சிறப்பாகப் பணியாற்றியவர் - சிறந்த சொற்பொழிவாளர் மானமிகு சுப்புலட்சுமி ஆவார். கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் பங்கேற்று சிறை சென்றவர். சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், இயக்கப் பணி ஆற்ற முடியாத நிலை! அவரின் இயக்கத் தொண்டுக்கு வீர வணக்கத்தைச் செலுத்து கிறோம். அவர் பிரிவால் துயருறும் மகன்கள் காமராஜ், நேரு, சித்தார்த்தன், மகள் திராவிடச் செல்வி ஆகியோருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

13.5.2021


குறிப்பு: இறுதிப் பயணம் - திருவாரூர் பெரிய மில் தெரு இல்லத்தில் இன்று (14.5.2021) பிற்பகல் ஒரு மணிக்கு நடைபெற்றது.

தொடர்புக்கு வி.எம்.ஆர்.காமராஜ், 9655459934.

No comments:

Post a Comment