சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனைப் பேர்களையும் 'டெப்பாசிட்' இழக்கச் செய்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (4.5.2021) பிற்பகல் 2 மணிக்கு சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பூண்டி கே. கலைவாணன் வருகை தந்தனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளைப் பெற்றனர். அவர்களுக்கு "திராவிடம் வெல்லும்" நூலினைப் பரிசாக வழங்கினார் கழகத் தலைவர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக்குரைஞர் அணி தலைவர் த. வீரசேகரன் ஆகியோர் அனை வரையும் வரவேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment