25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி திராவிடர் கழகத் தலைவரை இன்று சந்தித்து சால்வை அணிவித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அவருக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்து இயக்க நூல்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா உடன் வந்திருந்தார். தொடர்ந்து நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் ரூபி மனோகரன், ஈரோடு (கிழக்கு) சட்டப் பேரவை உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா., கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் (காங்கிரசு) ஆகியோரும் வந்திருந்து கழகத் தலைவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர். கழகத் தலைவர் சால்வை அணிவித்து நூல்களையும் வழங்கினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக்குரைஞர் அணி தலைவர் த. வீரசேகரன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment