செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 4, 2021

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்

 தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, மே 4- செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படு வார்கள் என திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற் படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வரு கின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன.

கடும் மழையிலும், கொளுத் தும் வெயிலிலும், பெருந்தொற் றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணி யாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித் தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற் றில் பணியாற்றி வருகின்ற தோழர் கள் அனைவருமே இந்த வரி சையில் அடங்குவார்கள். முன் களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்.

No comments:

Post a Comment