செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 11, 2021

செய்தியும், சிந்தனையும்....!

 தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை

கேள்வி: மனிதனுக்கு கடவுள்மீது எப்போது முழு நம்பிக்கை வருகிறது?

பதில்: மற்ற அனைத்து நம்பிக்கைகளையும் இழந்த பிறகு ('துக்ளக்' 19.5.2021) 

சிந்தனை:  தன்னம்பிக்கை பற்றி எந்தநிலையிலும் 'துக்ளக்'குகள் இனி எழுதக் கூடாது.

ஆமாம் 'புரோக்கர்' தான்

கேள்வி: 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்கிற போது தி.மு..வின் வெற்றியை நீங்கள் ஏற்க மறுப்பது ஏன்?

பதில்: ஸ்டாலினின் வெற்றியை, மக்கள் தீர்ப்பு என்று ஏற்று அவருக்கு வாழ்த்துக் கூறி விட்டேன். ஆனால் அதை மகேசன் தீர்ப்பு என்று நான் ஏற்கவில்லை. மக்கள் செய்த தவறுக்கு மகேசன் மேல் பழி போட நான் அரசியல்வாதியல்ல.  

சிந்தனை:  மகேசனாவது மண்ணாங்கட்டியாவது- அதெல்லாம் 'டு பாக்கூர்' என்று குருமூர்த்தி கும்பல் ஒப்புக் கொண்டு விட்டதே!

தந்தை பெரியாரைப் பின்பற்றவில்லையா?

கேள்வி: தி.மு..விடம் உங்களுக்குப் பிடித்தமான ஏதாவது கொள்கை உண்டா?

பதில்: தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று தூற்றிய .வெ.ரா.வை தந்தை என்று ஒருபுறம் தி.மு.. போற்றினாலும், மறுபுறம் அது தமிழின் பெருமையைப் போற்றுவது எனக்குப் பிடித்திருக்கிறது.   ('துக்ளக்' 19.5.2021 )  

சிந்தனை:  தமிழ்மொழி காட்டுத் தன்மையிலிருந்து விடுபட்டு, விஞ்ஞான மொழியாக வேண்டும் என்று விரும்பிய தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைத்தான் 'துக்ளக்' பின்பற்றி வருகிறதே!

No comments:

Post a Comment