தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை
கேள்வி: மனிதனுக்கு கடவுள்மீது எப்போது முழு நம்பிக்கை வருகிறது?
பதில்: மற்ற அனைத்து நம்பிக்கைகளையும் இழந்த பிறகு ('துக்ளக்' 19.5.2021)
சிந்தனை: தன்னம்பிக்கை பற்றி எந்தநிலையிலும் 'துக்ளக்'குகள் இனி எழுதக் கூடாது.
ஆமாம் 'புரோக்கர்' தான்
கேள்வி: 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்கிற போது தி.மு.க.வின் வெற்றியை நீங்கள் ஏற்க மறுப்பது ஏன்?
பதில்: ஸ்டாலினின் வெற்றியை, மக்கள் தீர்ப்பு என்று ஏற்று அவருக்கு வாழ்த்துக் கூறி விட்டேன். ஆனால் அதை மகேசன் தீர்ப்பு என்று நான் ஏற்கவில்லை. மக்கள் செய்த தவறுக்கு மகேசன் மேல் பழி போட நான் அரசியல்வாதியல்ல.
சிந்தனை: மகேசனாவது மண்ணாங்கட்டியாவது- அதெல்லாம் 'டு பாக்கூர்' என்று குருமூர்த்தி கும்பல் ஒப்புக் கொண்டு விட்டதே!
தந்தை பெரியாரைப் பின்பற்றவில்லையா?
கேள்வி: தி.மு.க.விடம் உங்களுக்குப் பிடித்தமான ஏதாவது கொள்கை உண்டா?
பதில்: தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று தூற்றிய ஈ.வெ.ரா.வை தந்தை என்று ஒருபுறம் தி.மு.க. போற்றினாலும், மறுபுறம் அது தமிழின் பெருமையைப் போற்றுவது எனக்குப் பிடித்திருக்கிறது. ('துக்ளக்' 19.5.2021 )
சிந்தனை: தமிழ்மொழி காட்டுத் தன்மையிலிருந்து விடுபட்டு, விஞ்ஞான மொழியாக வேண்டும் என்று விரும்பிய தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைத்தான் 'துக்ளக்' பின்பற்றி வருகிறதே!
No comments:
Post a Comment