தலையெழுத்தல்ல - தன்னம்பிக்கை
* ஒடிசாவில்
கரோனாவால் வேலையிழந்த ரஞ்சன் சாகு என்ற தோழர் வேலை இழந்த 70 பேரை ஒன்றிணைத்து ஆடை உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார்.
>> ‘‘வேலை கேட்கமாட்டோம்! வேலை கொடுப்போம்!'' நீண்ட காலத்திற்கு முன்பே இந்த முழக்கத்தைக் கொடுத்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
பிறன்நோய்
- தன்னோய்போல் கருதவேண்டும் - திருவள்ளுவர்
* கரோனா
நிவாரண நிதிக்கு தி.மு.க.
அறக்கட்டளை ரூபாய் ஒரு கோடி - பா.ம.க.
- எம்.பி.,கள், எம்.எல்.ஏ.,க்கள் ஒரு
மாத சம்பளம் நன்கொடை.
>> பணம் - மனிதனுக்குக் கருவியே தவிர, பணத்துக்கு மனிதன் கருவியல்ல!
சிதம்பரம்
தீட்சதர் வீடுகளைக் கவனியுங்கள்!
* குழந்தைத்
திருமணம் நடை பெற்றால் 1098 உதவி எண்ணில் புகார்தெரிவிக்கலாம். - சென்னை மாவட்ட ஆட்சியர் கீதாலட்சுமி.
>> மாவட்ட ஆட்சியர் ஒரு பெண்ணல்லவா!
சங்
பரிவார்க்குக் காணிக்கை
* கரோனாவால்
உயிர் இழந்த ஆதரவற்ற உடல்களுக்கு சொந்த செலவில் இறுதி மரியாதை செய்த - திருப்பதி இஸ்லாமிய குழுவினர்.
>> பாராட்டுக்குரியது - மதத்தைக் கடந்த மனிதநேயம்.
செவிடன்
காதில் ஊதிய சங்கு!
* வேளாண்
சட்டத்தை எதிர்த்து மருத்துவர்கள் ஆக்சி ஜனுடன் விவசாயிகள் போராட்டம்.
> சாலையோரத்தில் விபரீதக் குறி - எச்சரிக்கை!
நோயில்
கொடியது பசிப் பிணி!
* அரிசி
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருள்கள் ஜூன் 3 ஆம் தேதி வழங்க முடிவு.
>> இதற்குப் பெயர்தான் மக்கள் நல அரசு.
மயிலே
மயிலே என்றால் இறகு போடுமா?
* ஊரடங்கை
மீறினால் கடும் நடவடிக்கை - தமிழக டி.ஜி.பி.
எச்சரிக்கை!
>> ஊரடங்கு மக்களுக்காகத் தான் என்பது நினைவில் இருக் கட்டும்!
No comments:
Post a Comment