மத்திய பிரதேசம் : கும்பமேளா சென்று திரும்பியவர்களில் 99% பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 3, 2021

மத்திய பிரதேசம் : கும்பமேளா சென்று திரும்பியவர்களில் 99% பேருக்கு கரோனா

போபால், மே. 3 மத்தியப் பிர தேசத்தில் இருந்து கும்ப மேளாவுக்கு சென்று திரும்பி யவர்களில் 99% பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை பரவலில் இந்தியா கடு மையாக பாதிக்கப்பட்டுள் ளது.  இதற்கு முக்கிய காரணம் கும்பமேளா மற்றும் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் எனக் கூறப்படுகிறது.   ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் ஏரா ளமான கட்டுப்பாடு விதிக் கப்பட்டிருந்தாலும் அதை யாரும் கவனத்தில் கொள்ள வில்லை என்பதால் அதிக அளவில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த விழாவுக்கு நாடெங் கும் இருந்து பல லட்சக்கணக் கானோர் சென்றிருந்ததால் பரவல் மேலும் அதிகரிக்கும் என அச்சம் எழுந்தது.   அதை நிரூபிப்பது போல் தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் தொற்று பரவி வருகிறது.  கும்பமேளா வில் கலந்துக் கொண்டு திரும்பி வருவோரில் சிலர் மட்டும் கரோனா பரிசோ தனை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 99% பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இவர்கள் தற் போது தனிமையில் வைக்கப் பட்டுள்ளனர். அதே வேளை யில் கும்பமேளா சென்று விட்டு திரும்பியவர்கள் யார் யார் என எளிதாக கண்டறிய முடிவதில்லை என்பதால் இன்னும் எத்தனைபேர் கரோனா பாதிப்புடன் மாநி லத்தில் உள்ளனர் என்பதும் அவர்களிடம் இருந்து எத் தனை பேருக்கு கரோனா பர வும் என்பதும் அறியாததால் கடும் அச்சம் நிலவுகிறது.

டில்லி நகரில் இருந்தும் ஏராளமானோர் கும்பமேளா சென்று திரும்பி வந்துள்ளனர்.  அங்கு சென்று திரும்பி வரு வோர் அனைவரும் 14 நாட் கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பது டில்லியில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.   இதே அச்சம் குஜராத்தில் நில வுவதால் அங்கும் கும்பமேளா சென்று திரும் பியவர்களுக்கு கரோனா பரிசோதனை கட் டாயமாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment