வாழ்க புரட்சிக் கவிஞர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 29, 2021

வாழ்க புரட்சிக் கவிஞர்

 

எண்ணிக்கையில்   பாதியாய்

எத்திறத்தும் மிகுதியாய்

இருந்திடும்   பெண்ணினத்தின்

அடிமைத்தளையை             அறுக்காது

மண்ணடிமை             தீருமென்பது

முயற்கொம்பே         என்றுரைத்தவர்

மானமிகு        மனிதயினத்தின்

மாண்புகளை              கூறுபோட்டு

மனிதம்            கொல்லும்

மரணநஞ்சாம்            ஜாதியத்தை

மனமகிழ        ஏற்போரை

இன்னும்         இருக்கின்றானேயென்றவர்

என்னைப்       பேச வைத்த

தொன்மைத்                தமிழ்மொழிக்கு

தாயாம்            திராவிடத்தின்

எதிரியாம்      ஆரியத்தை

நத்திப்பிழைக்க         கோடிதரினும்

தொடமாட்டேன்      என்றவர்

வடக்கினை  வாழ வைக்கும்

தெற்கினை    மாள வைக்கும்

சுரண்டும்        வடவருக்கு

சூலறுக்கும்   பனங்கருக்காய்

சூடுபோம்       செம்பழுப்பிரும்பாய்

சுயமரியாதை            காத்தவர்

நான் யார்?      என்இனமெது?

என்றென்னைக்         கேட்டால்

'திராவிடன்   என்கையில்

நாவெலாம்   தேன்தான்'

எனமகிழ்ந்த பாவலன்

இனங்காத்த காவலன்

கொடியோர்க்கு         முடிவுகட்ட

எளியோர்க்கு              வாழ்வளிக்க

உலகாளத்      துடிக்கும்

தமிழுக்குத்    துணை நிற்க

புலியாய்         புறப்படு

தலையறுக்க              வாளெடு வென்றவர்


தமிழை  உயிருக்கு  நேரென்றார்

தந்தை  பெரியாரை  உயிரென்றார்

மணியம்மையை அன்னையன்றி  யாரென்றார்

ஆசிரியரை ஆசிரியர்கட்கு சட்டாம்பிள்ளையென்றார்

அவர்தான் புரட்சிக் கவிஞர்

அவர் பிறந்தநாளே ஏப்.29.                               

புரட்சிக் கவிஞரின் புத்துலகமைப்போம்

வாழ்க புரட்சிக்கவிஞர்!

---- முனைவர் அதிரடி .அன்பழகன்

மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்

திராவிடர் கழகம்

No comments:

Post a Comment