‘என்ன செய்கிறேன் பார்!'
* மேகதாதுவில் அணை கட்டும் பணியை விரைவுபடுத்தும் கருநாடக அரசு.
>> தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை அனுமதிக் காவிட்டால் பழிவாங்குவோம் என்ற போக்கா?
வட்டியும் முதலுமாக...
* மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் மம்தாவுக்கு ஒரு நாள் தடை. - தேர்தல் ஆணையம்
>> தேர்தல் முடிவில் தெரியும் பதிலடி!
மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!
* பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப் பளித்த நீதிபதிக்கு லோக் ஆயுக்தா பணி!
>> என்னதான் நடக்கும் நாட்டிலே?
என்று மடியும் அடிமையின் மோகம்?
* இராணிப்பேட்டை அருகே மேல் புதுப் பேட்டையில் 13 கொத்தடிமைகள் மீட்பு!
>> இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கொத்தடிமைகளா?
அடிமைகளின் ஆட்சியல்லவா!
சொல்பவர் மலை முழுங்கி மகாதேவனாயிற்றே!
* உத்தரகாண்ட்டில் 51 கோவில்களை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவித் துள்ளது - அதுபோல எல்லாக் கோவில் களையும் அனைத்து மாநில அரசுகளும் விடுவிக்கவேண்டும். - ஜக்கிவாசுதேவ்
>> சிதம்பரம் கோவிலில் தீட்சதர்கள் சுரண்டுவது போதாதா?
No comments:
Post a Comment