சென்னை, ஏப்.13 ரயில் பயணத்தின்போது கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதி கரித்து வருகிறது. இந்த நிலை யில் பயணிகள் ரயில் பயணத் தின் போது கட்டாயம் கரோனா பாதுகாப்பு வழி முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டி ருப்பதாவது:-
கரோனா 2ஆவது அலை கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் சவாலாக இருந்து வருகிறது. தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில்களில் பாதுகாப்பான பயணத்திற்கு கரோனா பாதுகாப்பு வழி முறைகளை பின்பற்றுமாறு தெற்கு ரயில்வே சார்பில் பயணிகளை கேட்டுக்கொள் கிறது.
அந்த வகையில் முகக் கவசம் அணிவது, சமூக இடை வெளி மற்றும் கை சுகாதாரம் போன்ற அடிப்படை கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். தேவையற்ற பயணம் மற்றும் குழுக்களாக பயணம் செய்வதை தவிர்க்கவும்.
பயணச்சீட்டு வழங்கும் இடங்கள் மற்றும் தளங்களில் சமூக இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும். காய்ச்சல், இருமல், சளி போன்ற கரோனா அறிகுறிகள் இருந்தால் ரயில் பயணத்தை பயணிகள் தவிர்க்க வேண்டும்.
கரோனா பரிசோதனை செய்து, அதன் முடிவுக்காக காத்திருப்பவரானால் அல்லது தனிமைப் படுத்தி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டால் அல்லது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் பயணத்தை தவிர்க்கவும்.
கரோனா பரவலை தடுக்க கை சுத்திகரிக்கும் கிருமி நாசினிகள், உணவு, நீர் போன்ற வற்றை பயணத்தின் போது பயணிகள் எடுத்துச்செல்ல வேண்டும். பயணிகள் அனை வரும் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பயணத்தின் போது பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை பாதிக் கும் அசுத்தமான அல்லது சுகாதாரமற்ற எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது.
வெளிமாநிலங்களில் இருந்து தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வரும் பயணிகள் இ-பாஸ், பரிசோத னை மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற நெறிமுறைகளை பயணத்தின்போது கண்டிப் பாக கடைப்பிடிக்கப் பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment