அஞ்சுவது அஞ்சாமை பேதமை!
* எடப்பாடி பழனிசாமியை பார்த்து திமுக பயப்படுகிறது.
- உள்துறை அமைச்சர் அமித்ஷா
>> மூட்டைப்பூச்சிகளையும் கொசுக்களையும் பார்த்துக் கூடத்தான் பயப்பட வேண்டியுள்ளது.
தேர்தல் நேரத்தில் செத்தவர் பிழைப்பார்!
* கோவை மாவட்டத்தில் இறந்தவர்கள் பெயரால் தபால் வாக்குப் போட விண்ணப்பம் - அதிகாரிகள் விசாரணை
>> தேர்தல் நேரமல்லவா! தேர்ந்தெடுத்த 'தில்லு முல்லுகள் கோலோச்சுமே! செத்தவர்கள் சிவலோக பதவி' அடைந்து அங்கிருந்து நேராக வாக்களிக்க விரைந்து வருவர் என்று நம்புவோமாக!
வம்படி வழக்கு!
* அரசு ஊழல் தொடர்பான வழக்கில் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக பீகார் மாநில அரசுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தது - உச்சநீதிமன்றம்
>> மக்கள் மன்ற தண்டனையிலிருந்து மயிரிழையில் தப்பிய அரசாயிற்றே!
சமாதானம்
* வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா கண்டறிவதில் சிக்கல் - மாநகராட்சி ஆணையர்
>> இப்பொழுதே சமாதானம் சொல்ல ஆரம்பித்து விட்டார்களா?
No comments:
Post a Comment