தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்
சென்னை,ஏப்.13- அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் என, திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக் கிறது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்னமும் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.
இந்நிலையில், முஸ்லிம் வாக் குகளைப் பெற மத ரீதியாகப் பேசிய தாகவும், மத்தியப் படைகளுக்கு எதிராக வெகுண்டெழுமாறு வாக்காளர்களை தூண்டியதாகவும் மம்தா மீது புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரச்சாரத்தில் ஈடுபட மேற்குவங்க முதல்வர் மம்தா வுக்கு தேர்தல் ஆணையம் நேற்று (ஏப். 12) தடை விதித்தது.
மம்தா சுட்டுரையில் விமர்சனம்
தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயக விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்டது என விமர்சித்து, ட்வீட் செய்துள்ள மம்தா இன்று (ஏப். 13) 12 மணியளவில் காந்தி மூர்த்தி பகுதியில் மறியலில் ஈடுபடப்போவதாகவும் குறிப்பிட் டிருந்தார்.
மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இது தொடர்பாக, திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் இன்று (ஏப். 13) தன் சுட்டுரைப் பக்கத்தில், "நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக் கையென்பது நேர்மையான, நியாய மான தேர்தல்களில்தான் நிலை கொண்டுள்ளது.
ஆகவே, அனைத்துக் கட்சி களுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதிசெய்வ தோடு, சார்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதி செய்திட வேண்டும்" என பதிவிட் டுள்ளார்.
No comments:
Post a Comment