கரோனா கால நடவடிக்கைகள் பிரதமருக்கு சோனியா காந்தி விரிவான அறிவுறுத்தல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 13, 2021

கரோனா கால நடவடிக்கைகள் பிரதமருக்கு சோனியா காந்தி விரிவான அறிவுறுத்தல்!

புதுடில்லி,ஏப்.13 நாட்டில் தற்போது எழுந்துள்ள கரோனா இரண்டாவது அலையை கையாள்வது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முக்கிய நட வடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள் மற்றும் கூட்டணி அரசுகளில் பங் கேற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர் களுடன் தான் விரிவான முறையில் கலந்துரையாடியுள்ளதாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அவர், 3 முக்கிய அம்சங்களை தனது கடிதம் மூலமாக பிரதமருக்கு அறிவுறுத்தியுள்ளார். அந்த 3 அம்சங் களாவது:

1. தடுப்பு மருந்துகள் மட்டுமே தற்போது பெரிய நம்பிக்கையாக உள்ளன. ஆனால், பல மாநிலங்களில், அம்மருந்துகள் வெகுசில நாள்கள் மட்டுமே கையிருப்பு உள்ளன. உள்நாட்டு தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்கும் அதேவேளையில், அடிப் படை தகுதிகளை நிறைவு செய்திருக்கும் தடுப்பு மருந்துகளுக்கு அவசர கால அனுமதியளிக்க வேண்டி யதும், இந்நேரத்தில் கட் டாயமாகிறது. வயது அடிப்படையில் தடுப்பு மருந்து வழங்கல் விதிமுறையை தேவைக்கேற்ப தளர்த்தி, மாநிலங் களில் நிலவும் சூழலுக்கேற்ப, தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க வேண் டும்.

2.  கரோனா சிகிச்சை தொடர்பான அனைத்து கருவிகள், உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு, ஜிஎஸ்டி வரியிலிருந்து கட்டாய விலக்களிக்க வேண்டும். தற்போது, வெண்டிலேட் டர்கள் மற்றும் ஆக்ஸிமீட்டர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

3. கரோனா பரவலைக் கட்டுப் படுத்தும் வகையில், பயணக் கட்டுப் பாடுகள், ஊரடங்கு மற்றும் கடைகள், நிறுவனங்களை மூடுதல் உள்ளிட்ட நட வடிக்கைகள் மீண்டும் எடுக்கப்படலாம். ஆனால், அத்தகைய நடவடிக்கைகள், கரோனாவால் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களை மீண்டும் வதைப்பதை தடுக்க, தகுதியுள்ளவர் களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.6000 செலுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். புலம்பெயர் தொழிலா ளர்கள், ஊரடங்கு அச்சத்தின் காரண மாக, தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்புவது ஏற்கெனவே தொடங்கி விட்டதால், அவர்கள் பாதுகாப்பாக வும், சிரமமின்றியும் தங்கள் ஊர்களை அடைவதை உறுதிசெய்வதோடு, தங்க ளின் சொந்த ஊர்களில் சிக்கலின்றி வாழ்க்கை நடத்துவதற்கும் நடவ டிக்கைகள் எடுக்கவேண்டும்.

சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.

 

No comments:

Post a Comment