மறந்தே போச்சு!
* அஞ்சல் நிலையங்கள் அரை நாள் மட்டுமே செயல்படும்.
>> ஓ, அப்படி ஒரு துறை இருக்கிறதா? அதுதான் பல்பொருள் விற்பனை அங்காடி ஆகிவிட்டதே!
‘இப்பொழுதென்ன அவசரம்?'
* அனுமதியளித்து 7 மாதங்கள் ஆகியும் 130 ஆக்சிஜன் ஆலைகளில் உற்பத்தி தொடங்காதது ஏன்?
- கே.எஸ்.அழகிரி, தலைவர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
>> அதுக்கென்னு கால, நேரம் வர வேணாமா?
‘விடாதே பிடி!'
* பணிக்கால முறைகேடுகள் - சூரப்பாவிடம் நேரடியாக விசாரணை நடத்த முடிவு.
>> பெரிய இடத்து போஸ்டிங்... ஆனாலும் என்ன?
அகத்தின் அழகு ‘முகத்தில்!'
* முகக்கவசம் அணியாத 6 லட்சம் பேர்மீது வழக்கு; 820 வாகனங்கள் பறிமுதல்.
>> முகக்கவசம் கரோனாவைத் தடுக்கும் மூக்கணாங்கயிறு!
குடியைக் கெடுக்கும் குடி!
* புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடல்.
>> குடிமக்கள் தப்பிக்க, இது அவசியம் தேவை.
விளையும் பயிர்?
* டிக்கெட் வாங்கக் கூறியதால் பேருந்து நடத்துநரை கத்தியால் வெட்டிய சிறுவர்.
>> நாடு எங்கே போகிறது?
ஆட்சியைக் கார்ப்பரேட்டுகளே அதிகாரப்பூர்வமாக நடத்துவார்களோ?
* கரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் தனியார் நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ளும்.
>> பெட்ரோல், டீசல் விலையைப் போலவா!
பாதுகாப்பு - ஜோசியத்தால் அல்ல!
* மத்திய பிரதேசத்தில் பாதுகாப்புக் கவச உடையில் நடந்த திருமணம்.
>> வாழ்க்கையும், பாதுகாப்பாக அமை யட்டும் - வாழ்த்துகள்!
இந்திய அரசுக்குச் ‘சமர்ப்பணம்!'
* கருநாடக அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 8 பேர் சாவு.
>> வாய்ச் சவடாலை முதலில் மத்திய அரசு நிறுத்தட்டும்!
தூரத்துச் செய்தி
* இந்தியாவில் கரோனா தாக்கிய 15 விழுக் காட்டினருக்கு மட்டும்தான் சிகிச்சை தேவைப்படுகிறது.
- உலக சுகாதார நிறுவனம் கருத்து
>> ஆனாலும், படுக்கை வசதிகள் கிடைக் காமல் இந்தியாவில் நோயாளிகள் தவிப்பு.
No comments:
Post a Comment