கொல்கத்தா,
ஏப்.18 இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் உத்தரவின் பெயரில் செயல்படுவதாக மம்தா தெரிவித்துள்ளார்.
294 தொகுதிகளை
கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 3 கட்டங்களும் முறையே ஏப்ரல் 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக் குகள் மே 2ஆம் தேதி எண் ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில்
திரிணா முல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில்,
மேற்கு வங்காளத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் எஞ்சிய தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் மேற்குவங்காள முதல் அமைச்சர் மம்தா தேர்
தல் ஆணையத்திடம் கோரிக் கை வைத்தார். ஆனால்,
அந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
இந்நிலையில்,
அம் மாநிலத்தின் ஹல்சி பகுதியில் மம்தா நேற்று
(17.4.2021) பிரச்சாரம்
மேற்கொண்டார். அப்போது பேசிய மம்தா,
கடைசி 3 கட்ட தேர்தல் களையும் ஒரேகட்டமாக நடத்த வேண்டும் என நாங்கள் தேர்தல் ஆணையத் திடம் கேட்டுக்கொண்டோம்.
ஆனால்,
அவர்கள் அதை செய்யாமல் பிரசார நேரத்தை குறைத்துள்ளனர்.
தேர்தல்
பிரச்சார நேரத்தை குறைத்த நீங்கள் (தேர்தல் ஆணையம்) தேர் தலை ஏன் ஒன்றாக நடத்தக் கூடாது? நீங்கள் (தேர்தல் ஆணையம்) பாஜகவின் உத்தரவின் பெயரில் செயல் படுகிறீர்கள்.
கரோனாவால் மிகப்பெரிய அளவில் ஏதே னும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நீங்கள் (தேர்தல் ஆணையம்) தான் பொறுப்பு. ஏற்கெனவே கரோனாவால் இரண்டு வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment