கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 11, 2021

கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்

இங்கிலாந்து, ஏப். 11- இங்கிலாந்து நாட்டில் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த போதும் மீண்டும் கருவுற்று இரட்டை குழந் தைகளை பெற்றெடுத்துள்ள அரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

பல விசித்திரமான, நம்ப முடியாத அரிய மனிதர்களின் வாழ்க்கை தொழில்நுட்பம், விஞ்ஞானம் என பரிணாம வளர்ச்சி பெற்றாலும்  இங்கிலாந்து நாட்டில் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த போது மீண்டும் கருவுற்று இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார். மருத்துவ உலகில் இதனைசூப்பர்ஃபெட்டேஷன்' என்று அழைக்கின்றனர்.

இங்கிலாந்தின் பாத் நகரைச் சேர்ந்த ரெபேக்கா ராபர்ட்ஸ் (39) கர்ப்பமாக இருந்தார். அவர் தனது கணவருடன் உடலுறவு கொண்ட சில நாட்கள் கழித்து மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். அவர் கடந்தாண்டு செப்டம்பர் 17ஆம் தேதி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார். இவர்கள் இரட்டையர்கள் என்றாலும் மூன்று வார இடைவெளியில் கருத்தரிக்கப்பட்டுள்ளனர்.

ஆண் குழந்தைக்கு நோவா என்றும் பெண் குழந்தைக்கு ரோசாலி என்றும் பெயர் வைத்துள்ளனர். ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது பெண் குழந்தை சிறியதாகவும், பலவீனமாகவும் பிறந்து உள்ளது. இதற்கு காரணம் ரோசாலி முன்கூட்டியே பிறந்தது தான். இதனால் ரோசாலிக்கு 95 நாட்கள் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆண் குழந்தை நோவா வுக்கு எந்த பிரச்சினையும் இல்லையென்றாலும் அந்த குழந் தைக்கும் மூன்று வாரங்கள் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

சூப்பர்ஃபெட்டேஷன் போன்ற அரிய நிகழ்வுகள் உலகில் 0.3% பெண்களை மட்டுமே பாதிக்கும். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இரண்டாவது குழந்தை கர்ப்ப காலத்தில் இறக்கிறது. ஆனால் ரெபேக்கா ராபர்ட்சுக்கு பிறந்த இரண்டா வது குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment