மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களைக் கலைக்கும் அவசர சட்டத்தைத் திரும்பப் பெறுக!: - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 11, 2021

மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களைக் கலைக்கும் அவசர சட்டத்தைத் திரும்பப் பெறுக!:

வைகோ வலியுறுத்தல்

சென்னை, ஏப்.11 .தி.மு.. பொதுச் செயலாளர் வைகோ நேற்று (10.4.2021) விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்தியாவின்அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைமையகம் 2003-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-இல் சென்னையில் அமைக்கப்பட்டது.

அப்போதைய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறனின் முயற்சியால் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒப்புதலுடன் அய்.பி..பி. தலைமையகம் சென்னையில் திறக்கப்பட்டது. வர்த்தக முத்திரை மற்றும் காப்புரிமை தொடர்பான வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும் பணியைஅறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்மேற்கொண்டு வருகிறது.

இதனை வேறு மாநிலத்திற்கு மாற்றும் முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வந்தபோது நான் மாநிலங்களவையில் இதுகுறித்து கேள்வி எழுப்பினேன். அதற்கு பிப்ரவரி 4, 2020 இல் பதில் அளித்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள், 'அய்.பி..பி.’ தலைமையிடத்தை வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை,” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னையை இந்தியத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறை யீட்டுத் தீர்ப்பாயம் உள்பட 9 முக்கியத் தீர்ப்பாயங்களை அவசர சட்டத்தின் மூலமாக கலைத்து விட்ட மத்திய பா... அரசு, அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று விட்டது.

வணிகச் சின்னம், காப்புரிமை, பதிப்புரிமை, புவிசார் குறியீடு மற்றும் உரிமை மீறல் போன்ற அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வழக்குகளை நீதித்துறை உறுப்பினர்களுடன் தொழில்நுட்ப உறுப்பினர்களும் இணைந்து விசாரித்து தீர்ப்பளிப்பர் என்பதால் பன்னாட்டு அளவில் இந்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

இதைப் போன்றே 'சினிமாட்டோகிராப் சட்டம் 1952'-இன்படி அமைக்கப்பட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், வருமான வரிச் சட்டம் 1961-இன்படி அமைக்கப்பட்ட 'அட்வான்ஸ் ரூலிங்ஸ்' ஆணையகம், இந்திய விமான நிலைய ஆணையகச் சட்டம்-1994-இன்படி அமைக்கப்பட்ட விமான நிலைய மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், தாவர வகை மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் 2001-இன்படி அமைக்கப்பட்ட தாவர வகைப் பாதுகாப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உள்ளிட்ட பல்வேறு தீர்ப்பாயங்கள் தற்போது கலைக்கப்பட்டு உள்ளன.

இந்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை இனி அந்தந்த மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களே விசாரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கின்றது. இதனால் உயர் நீதிமன்றத்தில் குவிந்து கிடக்கும் இலட்சக்கணக்கான வழக்குகளால் மேல்முறையீட்டுத் தீர்ப்பாய வழக்குகள் மேலும் பல ஆண்டுகளுக்கு விசாரணைக்காகக் காத்திருக்கும் அவல நிலை உருவாகும்.

எனவே, மத்திய அரசு பிறப்பித்துள்ள மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களைக் கலைக்கும் அவசர சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், சென்னையில் வாஜ்பாய் அரசால் திறக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைமையகம்  தொடர்ந்து இயங்கிட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கீழடியில் 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி:

சிறிய மண்பானைகள், கிண்ணங்கள் கண்டெடுப்பு

மதுரை, ஏப்.11 மதுரை அருகே உள்ள கீழடி ஊராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய-மாநில அரசுகளின் தொல்லியல் துறை சார்பில் ஏற்கெனவே 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த வருடம் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மாநில தொல்லியல் துறை சார்பில் கீழடி மற்றும் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றன.இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அந்த பொருட்களை ஆய்வு செய்யும்போது 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்காலதமிழர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிய வந்துள்ளது. தற்போது 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

முதலில் கீழடியிலும், பிறகு கொந்தகை, அகரம் பகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் ஒரு குழியில் பாசி -மணிகள், சில்லுவட்டுக்கள், பானை ஓடுகள், கொந்தகையில் முதுமக்கள் தாழி, மண் கிண்ணங்கள், அகரத்தில் சேதமான பானை, தானியங்கள் சேகரித்து வைக்கும் தாழி கண்டறியப்பட்டன.

இந்தநிலையில் கீழடியில் 2ஆவது குழி தோண்டப்பட்டு வந்தது. இந்த குழியில் சுமார் 9 அடி ஆழத்தில் தோண்டும்போது சேதமுற்ற நிலையில் சிறிய பானைகள், சிறிய மண் கிண்ணங்கள் மற்றும் பழங்கால வெள்ளை பாசிகள் கிடைத்துள்ளன. மேலும் சேதமடைந்த நிலையில் அதிக மண்பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன.

மேற்குவங்கத்திலும் மோசடியில் ஈடுபட்ட பாஜக

கொல்கத்தா, ஏப்.11  தமிழகத்தில் ஆங்காங்கே செய்த ஏமாற்றுத்தனம் போல் மேற்குவங்கத்திலும் பல தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் கொண்ட பலரை சுயேட்சையாக நிறுத்தி உள்ளது.

 சத்கட்சா என்ற தொகுதியில் 4 முறை வேட்பாளராக இருந்த சோனாலி குஹா திரிணாமுல் சார்பாக மீண்டும் போட்டியிடுகிறார். இவரது பெயரிலேயே 8 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.   திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் சின்னம்  போன்று வேறு எந்த சின்னமும் ஒத்துப்போகாத காரணத்தால் பாஜக இந்த ஏமாற்று வேலையைச் செய்துள்ளது.  தமிழகத்தில் பல தொகுதிகளில்  உதயசூரியன் போல் தோன்றும் பேனா முனையில் 7 கதிர்கள் கொண்ட சின்னத்தை பாஜக வேட்பாளர்கள் திமுகவிற்கு எதிராக போட்டியிடும் தொகுதியில் சுயேட்சைகளுக்கு ஒதுக்கியது குறிப்பிடத்தக்கதாகும்.  

2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் சுயேட்சைகள் பெற்ற வாக்குகள் 800 - இந்த வாக்கு களில் பல சின்னங்கள் குழப்பத்தாலும் பெயர் ஒற்றுமையாலும் பிரிந்தவாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது,

அப்பாவு தேர்தல் முடிவிற்கு எதிராக தொடர்ந்த வழக்கு 5 ஆண்டுகள் கழித்து இன்னமும் இறுதித் தீர்ப்பிற்கு காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment