உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 7, 2021

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்

புதுடில்லி, ஏப். 7 உச்சநீதிமன் றத்தின் புதிய தலைமை நீதி பதியாக என்.வி.ரமணா நிய மனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தற் போதைய தலைமை நீதிபதி யாக செயல்பட்டு வருபவர் எஸ்.. போப்டே. இவர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயர் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். போப்டே வின் பதவி காலம் வரும் ஏப் ரல் மாதம் 23 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, உச்சநீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது என்பது குறித்து பரிந்துரை அளிக்கும்படி தற்போதைய தலைமை நீதிபதியான போப் டேவிற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் அனுப்பினார்.

இதற்கு, உச்சநீதிமன்றத் தின்  அடுத்த தலைமை நீதிபதி யாக என்.வி. ரமணாவின் பெயரைதற்போதைய தலைமை நீதிபதி போப்டே பரிந்துரை செய்து அனுப்பினார்.

போப்டேவுக்கு அடுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவர் என்.வி. ரமணா. ஆகவே, தலைமை நீதிபதி பரிந்துரை செய்தார்.

தற்போது  பரிந்துரை ஏற் கப்பட்டு  என்.வி.ரமணா உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நிய மிக்கப்பட உள்ளார். இதற் கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்து உள்ளார்.

புதிதாக பதவியேற்க உள்ள என்.வி. ரமணா 2022 ஆகஸ்ட் மாதம் வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யாக பதவியில் இருப்பார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த என்.வி.ரமணா 2014 ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். காஷ் மீரில் சிறப்புத் தகுதி நிலை ரத்து செய்யப்பட்டபோது அங்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் காஷ்மீரில் இணைய தள சேவை முடக்கப்பட்டதை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத் தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அமர்வில் என்.வி. ரமணாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment