அய்தராபாத், ஏப். 7 நாட்டில் நடக்கும் பெரும் பாலான சாலை விபத்துக ளுக்கு, வாகனத்தை ஓட்டும் போது, ஓட்டுநர் தூங்கி விடுவது, முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இதை தடுக்க, தெலுங் கானா மாநிலம், அய்தராபா தில் உள்ள, எச்.சி.இ.எம்.இ., எனப்படும், ராணுவ மின் னணு மற்றும் மெக்கானிகல் பொறியியல் கல்லூரி, கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இது குறித்து, கல்லூரியின் செய்தி தொடர்பாளர் கூறிய தாவது:
வாகனம் ஓட்டும் போது, தூக்கத்தில், ஓட்டுரின் இமை கள் மூடினால், ஒலி எழுப்பி, அவரை விழிப்படையச் செய் யும் கருவியை வடிவமைத்துள் ளோம். ஒட்டுநர் இருக்கைக்கு அருகே, அவரது விழிகளை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், இரண்டு கேம ராக்கள் பொருத்தப்படும். இமைகள் மூடும் போது, கம்ப்யூட்டர் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்ட, ‘அய் ட்ராக் கர்’ எனப்படும் கருவி, ஒலி எழுப்பி, ஓட்டுநரை விழிப் படையச் செய்யும். பகல், இரவு என, எல்லா நேரங்களி லும், இந்த கருவி செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கருவியை, தெலுங்கானா மாநில, தகவல் தொழில்நுட்பம், வர்த்தகத் துறை முதன்மை செயலரிடம், கல்லூரி நிர்வாகம் சமீபத்தில் வழங்கியது. போக்குவரத்து அதிகாரி களுடன் ஆலோ சனை நடத்தி, வாகனங்களில் இந்த கருவியை பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, முதன்மை செயலர் தெரிவித் துள்ளார்.