தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு மோடி ஆட்சியின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக இருக்கப் போகிறது : இந்திய கம்யூனிஸ்டு டி.ராஜா பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 5, 2021

தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு மோடி ஆட்சியின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக இருக்கப் போகிறது : இந்திய கம்யூனிஸ்டு டி.ராஜா பேட்டி

சென்னை, ஏப்.5 இந்திய கம்யூ னிஸ்டு கட்சி தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, சென்னை தியாகராயநகரில் நேற்று (4.4.2021) செய்தியாளர் களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

தமிழகத்தில் தி.மு.. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறப் போகிறது. மக்கள் எழுச்சி அதை பறைசாற்றுகிறது. எனவே இதுவே மக்களின் தீர்ப்பாக இருக்கப்போகிறது. அதேபோல புதுச்சேரியிலும் காங்கிரஸ்-தி.மு.. கூட்டணி அரசு மகத்தான வெற்றி பெறும். .தி.மு..-பாஜக கூட்டணி படுதோல்வியை சந்திக்கப் போகிறது. இந்தத் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மத்தியில் மோடி ஆட்சிக்கு எச்சரிக்கை மட்டுமல்ல, அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்கும் தொடக்க மாக இருக்கப்போகிறது.

தமிழகம், புதுச்சேரியில் தேர்த லுக்காக அதிகார அத்துமீறல்களும், பண விநியோகமும் அதிக அளவில் உள்ளதாகத் தகவல் வருகிறது. எனவே, தேர்தல் ஆணையம் சுதந் திரமான, நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும். ஏற்கெனவே வாக் குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்வதில் குழப்பம், அவற்றை வாக் குப்பதிவின் போது பயன்படுத்துவதில் குளறுபடிகள் போன்ற பல்வேறு சந் தேகங்கள் மக்கள் மனதில் எழுந் துள்ளன. இவற்றையெல்லாம் தேர் தல் ஆணையம் கணக்கில்கொண்டு தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். தமிழகத்தில் இந்த தடவை நடைபெற உள்ள தேர்தல் நாடே எதிர்நோக்கும் சரித்திர தேர்தலாக இருக்கப்போகிறது. ஆட்சி மாற்றமே மக்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். பேட் டியின்போது இந்திய கம்யூனிஸ்டு மாநில துணை செயலாளர் வீரபாண் டியன், செயற்குழு உறுப்பினர் பெரிய சாமி, நிர்வாகக்குழு உறுப்பினர் ஜி.ரவீந்திரநாத் ஆகியோர் உடனி ருந்தனர்.

No comments:

Post a Comment