தமிழகத்தில் ஒரே நாளில் 3,581 பேருக்கு தொற்று உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 5, 2021

தமிழகத்தில் ஒரே நாளில் 3,581 பேருக்கு தொற்று உறுதி

சென்னை, ஏப்.5 தமிழகத்தில் நேற்று (4.4.2021) ஒரே நாளில் 3,581 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக் கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தநிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் நேற்று புதிதாக 3,581 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத் தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,99,807 ஆக அதிகரித் துள்ளது. தமிழகத்தில் நேற்று (4.4.2021) 14 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனா வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,778 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மேலும் 1,344 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,53,760 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மேலும் 1,813 பேர் கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதனால் தமிழகத்தில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர் களின் மொத்த எண்ணிக்கை 8,65,071 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment