பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை மாற்றுவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 14, 2021

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை மாற்றுவதா?

தந்தை பெரியார் பெயர் கேட்டாலே நடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா? உடனடியாக மாற்றிடுக!

தாமதித்தால் மே 2 ஆம் தேதிக்குப் பிறகு ஆணை வெளியாகும்!

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் கண்டனம்

சென்னை,ஏப்.14- பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலை பெயர் மாற்றப்பட்டு இருப்பதைக் கண்டித்து தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் நேற்று (13.4.2021) முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தந்தை பெரியார் நூற்றாண்டு  விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் .வெ.ரா நெடுஞ்சாலை என 1979 இல் பெயர் சூட்டினார் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்டபோதும் அந்தப் பெயரே நீடித்து வந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பல கையில் Grand Western Trunk Road என  எழுதப்பட்டிருப்பதும், நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தமிழகத்தில் .தி.மு..வின் காபந்து சர்க்காருக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில், இந்தத் திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது? .தி.மு..வின் நிறுவனரான எம்.ஜி.ஆர். சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு, தனது டில்லி எஜமானர்களின் கால் பிடிக்கும் அரசாக இருக்கிறதா? அல்லது தந்தை பெரியார் பெயரைச் சொன்னாலே நடுநடுங்கும் மதவெறி சக்திகளின் அதிகார ஆட்டமா?

எதுவாக இருந்தாலும், மீண்டும் பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன். தாமதம் செய்தால், மே 2 ஆம் தேதிக்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்க.

- இவ்வாறு தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டா லின் தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

 திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் டுவிட்டரில் எச்சரிக்கை

சென்னை,ஏப்.14 திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் நேற்று (13.4.2021) டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத் தரவு வந்தது?

எஜமானர்கள் கால்பிடிக்கும் வேலையா? தந்தை பெரியார் பெயர் கேட்டாலே நடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா?

உடனடியாக மாற்றிடுக!

தாமதித்தால் மே 2 ஆம் தேதிக்குப் பிறகு ஆணை வெளியாகும்!

- இவ்வாறு தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment