நேற்று (13.4.2021) நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையில் ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை' பெயர் மாற்றப்பட்ட கொடுமையைப் போலவே, ‘அண்ணா சாலை'யின் பெயரும் ‘கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு' என்றும், சென்னை காமராசர் சாலை (கடற்கரை சாலை)யின் பெயரும் ‘கிராண்ட் நார்தென் டிரங்க் ரோடு' என்றும் குறிக்கப்பட்டிருப்பதாக நமக்கு சில தகவல்கள் வந்துள்ளன.
அதாவது ‘மவுண்ட் ரோடு' என்பது ‘அண்ணா சாலை' என்று மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் பெரியாருக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அண் ணாவுக்கும், காமராசருக்கும் செய்துள்ளனர்!
விமான நிலையத்தில் அண்ணா, காமராசர் பெயர்களும் அகற்றப்பட்டு, அப்படியே நீடிக்கும் கொடுமையில் மாற்றமில்லை.
விரைவில் இந்த அநியாய அக்கிரமங்களைக் கண்டித்து, மாபெரும் மக்கள் போராட்டத்தைத் தொடங்க மக்களை தமிழ்நாட்டு அ.தி.மு.க. அரசு ஏனோ தூண்டுகிறது!
வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம்!
அரசே இப்படி போராட்டங்களைத் தூண் டலாமா? அண்ணா பெயரில் கட்சி - ஆனால், அண்ணா பெயருக்கும் ஆபத்து என்றால், இதன் ‘‘மூலப் புருஷர்கள்'' யார்? எந்தப் பின்னணியில் இந்த விஷமங்கள் விதைக்கப் பட்டன?
தமிழ்நாட்டு மக்களே, அறைகூவல்கள் எப்படி உருக்கொள்கின்றன பார்த்தீர்களா?
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.4.2021
No comments:
Post a Comment