அமெரிக்காவில் மனைவியை கொன்றுவிட்டு, இந்திய பொறியாளர் தற்கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 11, 2021

அமெரிக்காவில் மனைவியை கொன்றுவிட்டு, இந்திய பொறியாளர் தற்கொலை

வாசிங்டன், ஏப். 11- மராட்டிய மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அம்பா ஜோகையை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார் (வயது 32). இவர் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆரத்தி (வயது 30). குடும்பத்தலைவி.

இந்த தம்பதியருக்கு 2014ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணமானது. அதைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு நியூஜெர்சி மாகாணத்தில் நார்த் ஆர்லிங்டனில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ஆரத்தி மீண்டும் கர்ப்ப மாக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 7.4.2021 அன்று உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு பாலாஜி, ஆரத்தி தம்பதி யரின் மகள் வீட்டின் பால்கனியில் நின்று அழுதுகொண்டு இருந்திருக் கிறாள்.

இதைக்கண்டதும் அக்கம்பக்கத்தி னர் என்னவோ ஏதோ என பதறிப் போய் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது, பாலா ஜியும், ஆரத்தியும் கத்திக்குத்து காயங் களுடன் ரத்த வெள்ளத்தில் பிண மாகக் கிடந்தனர்.

காவல்துறையினர் அவர்களின் உடல்களை கைப்பற்றி உடற் கூறாய் வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம் பவம் பற்றிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் ஆரத்தியை, பாலாஜி கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, அதே கத்தியால் தானும் குத்திக்கொண்டு தற்கொலை செய்துள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இதுபற்றி அம்பாஜோகையில் உள்ள பாலாஜியின் தந்தையும், தொழில் அதிபருமான பரத் ருத்ரவாருக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பரத் ருத்ர வார் கூறியதாவது:-

உள்ளூர் காவல்துறையினர் நடந்த துயர சம்பவம் குறித்து எனக்கு தெரிவித்தனர். என்ன நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை. உடற்கூறாய்வு அறிக்கை வந்தபின்னர் அது பற்றிய தகவல்களை தெரிவிப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

என் மருமகள் 7 மாத கர்ப்பிணி. நாங்கள் அமெரிக்கா சென்று அவர் களுடன் இருந்து விட்டு வந்தோம். மீண்டும் அமெரிக்காவுக்கு அவர் களை பார்க்கச்செல்ல திட்டமிட்டி ருந்தோம். இந்த நிலையில்தான் இப்படி ஒரு துயரம் நடந்து விட்டது. இதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் மகிழ்ச்சி யான தம்பதியராகத்தான் இருந்து வந்தார்கள்.

எல்லா சட்டநடைமுறைகளும் முடிந்து அவர்களது உடல்களை எடுத்து வர 10 நாட்கள் வரை ஆகலாம். எனது பேத்தி, எனது மகனின் நண்பர் வீட்டில் இருக்கிறாள். என் மகனுக்கு அங்கு நிறைய இந்திய நண்பர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment