சென்னை,ஏப்.14- கடந்த ஆண்டை விட சென்னையில் கரோனா வேகமாகப் பரவிவருகிறது. எனவே பொதுமக்கள் அத்தியாவசியத் தேவை களுக்கு தவிர்த்து மற்றவைகளுக்கு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அய்சிஎம்ஆர் தமிழகப் பிரிவின் துணை இயக்குநர் பிரதீப் கவுர், தமிழக அரசு கரோனா தொற்று தொடர்பான ஆலோசனைக் குழுவிற்கு அவ்வப்போது தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி நாள்தோறும் கரோனா தொடர்பான விழிப்புணர்வு தகவல்களையம், மருத்துவ அறிவுரைகளையும் அவ்வப்போது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இவர் தமிழக அரசுக்கு கரோனா தொற்று தொடர்பாக தெரிவித்துள்ளதாவது:-
முதல் அலையில் பதிவான எண்ணிக் கையைவிட சென்னையில் இப்போது அதிக தொற்று பதிவாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டைவிட சென் னையில் கரோனா வேகமாக பரவி வருகிறது.
கடந்த ஜுன் மாதம் இறுதியில் 2 வார ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்புதான் கரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. தற்போது உள்ள நிலையில் வரும் தொற்று பாதிப்பு உயரும்.
தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினாலும் தொற்று குறைய 14 நாட்கள் வரை ஆகும். எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர்த்து மற்றவைகளுக்கு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment