முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
சென்னை, ஏப். 7 கரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடி வெற்று யோசனைகளை கூறியதை மக்கள் ஏற்கவில்லை என்று ப.சிதம்பரம் கூறினார்.
முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்ப தாவது:-
தொற்றின் இரண்டாம் அலை தொடங்கி விட்டதை மறுத்து மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.தடுப்பூசி இயக்கம் நொண்டி நடக்கும் காட்சி நமக்கு கவலையளிக்கிறது. தட்டுகளைத் தட்டுங்கள்,அகல் விளக்கை ஏற் றுங்கள் என்று வெற்று யோச னைகளைச் சொல்லியதையும் மக்கள் மறக்கவில்லை.
தொற்றின் பரவல் குறைந்த நேரத்தில் தடுப்பு ஊசி இயக்கத்தை விரைவுபடுத்தாமல் பொன்னான காலத்தை மத்திய அரசு விரயமாக்கியது.
இவ்வாறு அந்த பதிவில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment