ரெம்டெசிவிர் மருந்து தடையின்றி கிடைக்க மாவட்டந்தோறும் கட்டுப்பாட்டு அறை: மராட்டிய அரசு முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 12, 2021

ரெம்டெசிவிர் மருந்து தடையின்றி கிடைக்க மாவட்டந்தோறும் கட்டுப்பாட்டு அறை: மராட்டிய அரசு முடிவு

 மும்பை, ஏப். 12- மராட்டியத்தில் 2ஆவது கரோனா அலை அசுர வேகத்தில் பரவிவருகி றது. 10.4.2021 அன்று மாநிலத் தில் 55 ஆயிரத்து 411 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட னர். மேலும் 5 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் கள் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் காரணமாக நோய் தீவிரம் அதிகம் உள்ள நோயா ளிகளுக்கு கொடுக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த மருந்து கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதைத் தடுக்கவும், தேவை யான நோயாளிகளுக்கு ரெம் டெசிவிர் தடையின்றி கிடைக் கவும் மாநில அரசு மாவட் டந்தோறும் கட்டுப்பாட்டு அறையை அமைக்க முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக சுகாதார சேவை ஆணையர் என். ராமசாமி அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். இதேபோல அர சும் ரெம்டெசிவிர் மருந்துக்கு ரூ.1,100 முதல் ரூ.1,400 விலை நிர்ணயம் செய்ய அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் உற்பத்தியை அதிகரிக் கவும் மருந்து நிறுவனங்களை வலியுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment