காணொலிக்குள் மதத்தை புகுத்தி அவதூறு பரப்பிய இந்துத்துவா கும்பல்: தக்க பதிலடி கொடுத்த கேரள மக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 13, 2021

காணொலிக்குள் மதத்தை புகுத்தி அவதூறு பரப்பிய இந்துத்துவா கும்பல்: தக்க பதிலடி கொடுத்த கேரள மக்கள்

திருவனந்தபுரம், ஏப். 13-- கேரளாவில் இந்து மாணவியும், இஸ்லாமிய மாணவரும் ஆடிய நடனத்தை இந்துத்துவா கும்பல்கள், ‘லவ் ஜிகாத்என வசைபாடி வருகின்றனர். அதற்கு கேரள மக்கள் தக்கபதிலடி கொடுத்து வருகின்றனர்.

மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப் பேற்றது முதல் தாழ்த்தப்பட்ட மக் கள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, பா... ஆட்சியில் நாடு முழுவதுமே இந்துத்வா கும்பல் களின் அராஜகம் நாளுக்கு நாள் அதி கரித்த வண்ணம் உள்ளது.ஆனால், அதேவேளையில் இந்துத்துவா கும் பலின் பிற்போக்குக் கருத்துக்கு பல் வேறு ஜனநாயக அமைப்பினர், மாணவர்கள், இளைஞர்கள் என பொதுமக்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்களின் கண்டனங் களையும் பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக, பசுக் காவலர்கள், இந்து மத காவலர்கள் என்ற பெயரில் கிளம் பிருக்கும் இத்தகைய குண்டர் கும்பல் கள், மாட்டுக்கறியை உணவாக எடுத் துக்கொள்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், இந்து மத பெண்கள் பிறமதத்தினரை காதலித்தாலோ, திருமணம் செய்தா லோ அவர்களை மதமாற்றம் செய்வ தற்காகத் தான் திட்டமிட்டே முஸ் லிம் மதத்தவர் காதலித்து திருமணம் செய்கிறார்கள் என்று கூறிலவ் ஜிகாத்என முத்திரை குத்துவது போன்ற மோசமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த 2017ஆம் ஆண்டு மகளிர் தினத்தில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக கூடி, மகளிர் தினம் கொண்டாடியதைப் பொறுத் துக் கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்வா கும்பல்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இது நாடுமுழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது. இதனை யடுத்து, ‘கிஸ் ஆஃப் லவ்என்ற பெய ரில் முத்தப்போராட்டம் ஒன்றை நடத்தி இந்துத்வா கும்பல்களுக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தை முதன் முதலில் முன்னெடுத்தது கேரளா தான். கேரளாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு எனப் பல இடங் களில் தொடங்கிய இந்த போராட் டம், கேரளசட்டசபையிலும் எதி ரொலித்தது. அதேபோல், மாட்டுக் கறிக்கு எதிராகஇந்துத்வா கும்பல் தாக்குதல் நடத்தியபோதும், மாட்டுக் கறி உணவுத் திருவிழாவை நடத்தியது கேளர அரசு.இந்துத்வா கும்பலுக்கு சலிக்காமல் கேரள மக்கள் பதிலடி கொடுத்துவரும் வேளையில், தற் போது மீண்டும் இந்துத்வா கும்பலின் உண்மை முகத்தை, அம்பலப்படுத்தி வருகின்றனர்.

கேரளாவில் கடந்த வாரம் இந்து மாணவியும், இஸ்லாமிய மாணவரும் ஆடிய நடனத்தை இந்துத்வா கும்பல் கள், ‘டான்ஸ் ஜிகாத்என விமர் சித்து வந்த நிலையில், தற்போது மாணவி யும், மாணவரும் ஆடியதைப்போன்ற நடன காணொலிகளுக்கு இந்திய மாணவர் சங்கத்தினர் வரவேற்று அழைப்பு விடுத்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மருத்துவக் கல்லூ ரியில் மாணவி ஜானகி ஓம்பிரகாஷ் மற்றும் மாணவர் நவீன் கே.ரசாக் இருவரும் கடந்த வாரம் ரஸ்புடின் (RASPUTIN) என்ற ஜெர்மன் பாப் பாடலுக்கு நடனம் ஆடி காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியைத் தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல ரும் வரவேற்று அந்த காணொலியை பகிர்ந்து வந்தனர்.

ஆனால், மற்றொரு பக்கம் அந்த காணொலியில் ஆடிய மாணவியின் மதத்தை வைத்தும், மாணவரின் மதத்தை வைத்தும்லவ் ஜிகாத்போன்றுடான்ஸ் ஜிகாத்என்று அவதூறு கிளப்பி வருகின்றனர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்வா கும்பல்கள். மேலும் இருவரையும் வைத்து சர்ச்சைக்குரிய கருத்துகளை யும் அவ்வமைப்பினர் சமூக வலை தளங்களில் கூறி வந்துள்ளனர்.

இதனையடுத்து அந்த காணொலி கேரளாவில்பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் நவீன் மற்றும் ஜானகிக்கு ஆதரவளித் தும், நடனத்தை மதத்துடன் தொடர் புப்படுத்தி பேசியவர்களுக்குத் கண்ட னம் தெரிவிக்கும் வகையிலும், இந்திய மாணவர் சங்கத்தினர்  ‘STEP UP WITH RASPUTIN, AGAINST RACISM’ என்ற பெயரில் நடனப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். மாணவ - மாணவியர்ரஸ்புடின்நடனம் ஆடி காட்சிப் பதிவாக்கி தங்களின் வாட்ஸ் அப் எண் அல்லது -மெயில் அய்.டிக்கு அனுப்பக் கோரியும், சிறந்த நடனத்துக்கு ரூபாய் 1,500 பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து திருச்சூர் மருத் துவக் கல்லூரி மாணவர்கள் #RESISTHATE (வெறுப்பைத் தடுத்து நிறுத்து) என்ற ஹேஷ்டேக்குடன்ரஸ்புடின்நடனம் ஆடி, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மாணவர்களின் இந்த காட்சிப் பதிவு அதிக கவனத்தை ஈர்த் துள்ளது.இந்நிலையில், இதுகுறித்து மாணவி ஜானகி கூறுகையில், “திரு வனந்தபுரம்தான் எனது சொந்த ஊர். அம்மா மாயா மருத்துவர்; அப்பா ஓம்பிரகாஷ் மருத்துவ ஆராய்ச்சியாளர். எங்களது வீட்டின் அனுமதியோடுதான் அவ்வபோது மன அழுத்தங் கள் நிறைந்த மருத் துவப்படிப்புக்கு இடையில், "ரிலாக்ஸ்க்காக" இதுபோன்ற நடனம் ஆடி வருகின்றோம்.

ஆனால், இந்தமுறை எங்கள் காணொலி இவ்வளவு வேகமாக பரவும் என நாங்கள் எதிர்பார்க்க வில்லை. எங்கள் இருவருக்கும் பிடித் தமான பாடல் அது. தொடர்ந்து நாங்கள் இதுபோன்று நடனம் ஆடு வோம்எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து நவீன் கூறுகையில், “வயநாடு மாவட்டம் மானந்தவாடி எனது ஊர். நானும் ஜானகியும் எங் கள் கல்லூரியில் உள்ளவைக்கிங்ஸ்என்ற நடனக்குழுவில் இருக்கிறோம். வகுப்பு முடித்துவிட்டு யூனிஃபார்மில் இருந்தபோது நோயாளிகள் இல்லாத பகுதியில், அந்த நடனம் ஆடினோம். இருவருக்கும் நடனத்தில் ஈடுபாடு உள்ளதால், படிப்பு நேரம் போக மீது நேரம்நடனப் பயிற்சி மேற்கொள் வோம். படிப்பையும் சிறப்பாக மேற் கொள்வோம்எனத் தெரிவித்தார். வழக்கம் போல கேரள மக்களின் எதிர்ப்புகளை இந்துத்வா கும்பல்கள் சம்பாதித்துக்கொண்டதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment