முதுபெரும் பெரியார் பெருந் தொண் டர் - "பெரியார் சிந்தனைகள்" மூன்று தொகுதிகளை வெளியிடுவதற்குக் காரணமாக இருந்த தோழர்
வே. ஆனைமுத்து அவர்கள் தமது 96ஆம் வயதில் இன்று (6.4.2021) மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றவரும் ஆவார்.
அவர்தம் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திராவிடர் கழகம்
சென்னை
6-4-2021
No comments:
Post a Comment