சமூக நலன்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டதற்கான விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 18, 2021

சமூக நலன்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டதற்கான விருது

தி.மு.. தலைவர் மு..ஸ்டாலினுக்கு மராட்டிய மாநில ஆளுநர் வழங்கினார்

சென்னை, ஏப். 18- சமூக நலன்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டதற்கான விருதினை மராட்டிய மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரி அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கினார்.

கோவா மாநிலம் தாஜ் ரெசார்ட் மற்றும் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற விழாவில், தி.மு.. தலைவர், தளபதி மு.. ஸ்டாலினுக்கு ‘‘இன்டராக்டிவ் போரம் ஆப் இந்தியன் எகானமி'' என்ற அமைப்பு சார்பாக 2020ஆம் ஆண்டில் சமூக நலன்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டதற்கான விருது வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கு மராட்டிய மாநில ஆளுநர் பகத் சிங் கோசியாரி தலைமை தாங்கினார்.

இந்த விருதை 2018ஆம் ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும், 2019ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் வழங்கினார்கள். இவ்விருதை, மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கடந்த காலங்களில் பெற்றுள்ளனர். சமூக நலனுக்கான இந்த விருதை ஏற்றுக் கொண்டு தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் உரையாற்றிய காணொலி நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது.

அதில் தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் பேசியதாவது:-

2020 ஆம் ஆண்டில் சமூக நலன்களுக்கு முன் மாதிரியாக செயல்பட்டதற்கான விருதுக்கு என்னை தேர்வு செய்துள்ள உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கியான் சுதா மிஸ்ராவுக்கும் - இந்த அமைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாழ்வில் இருப்போருக்கு சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றுவது மிக முக்கியக் கடமை. தி.மு.. அரசு அமைந்த போதெல்லாம், பல்வேறு சமூகநல - சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாட்டில் சாதித்துக் காட்டியிருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் சமூகநீதிக்கான திட்டங்களை - சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

தமிழகத்திலுள்ள சமூக நலத் திட்டங்களும் - சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் இன்றைக்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்கின்றன என் பதை இந்த விருது பெறும் நேரத்தில் பெருமையுடன் பதிவு செய்ய விரும்பு கிறேன்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போதுகூட கரோனா பேரிடரில் மருந்து, உணவு, அத்தியாவசியத் தேவைகள் போன்றவை ஒவ்வொருவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக - “ஒன்றிணைவோம் வாஎன்ற திட்டத்தை ஒரு இயக்கமாக நடத்தி மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கிய இயக்கம் தி.மு...

அதன் தலைவராகப் பொதுவாழ்வில் இருக்கும் என் போன்றோரின் பணி களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த விருதிற்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் சட்டம் உறுதியளித்துள்ள சமூக, பொருளா தார பாதுகாப்புத் திட்டங்களைச் செயல் படுத்துவதில் என்றைக்கும் இந்தியாவின் முன்கள வீரனாகத் தமிழகம் இருக்கும் என்று உறுதியளித்து,

என்னை இந்த விருதிற்குத் தேர்வு செய்த இந்த அமைப்புக்கும், நீதிபதிகளுக்கும் மீண்டும் எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- இவ்வாறு தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment