கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மானமிகு தோழர் இன்பக்கனி அவர்களது தம்பி மானமிகு பொறியாளர்
ச. முகிலரசு B.E. (வயது 60) அவர்கள் உடல் நிலை குன்றி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (5.4.2021) திங்கட்கிழமை காலை இயற்கையெய்தினார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம்.
இவர்களது தாய், தந்தையரான இந்திராணி - சபாபதி அவர்கள் காலந்தொட்டே அத்துணைப் பேரும் மாறாத கொள்கையாளர்கள். எடுத்துக்காட்டாக என்றும்விளங்கும் பெரியாரிஸ்டுகள்.
அவரது மறைவு அக்குடும்பத்திற்கு மட்டும் அல்ல; நம் இயக்கத்திற்கே மாபெரும் இழப்பு ஆகும்!
மறைந்த தோழர் ச. முகிலரசு அவர்கள் பண்பாளர்; சிறந்த கொள்கையாளர்; அவரை இழந்து தவிக்கும் அவரது வாழ்விணையர் திருமதி. சுமதி மலர்விழி, அவரது மகன் சங்கமித்திரன் மற்றும் சகோதரிகள் - குடும்பத்தவருக்கு நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் உரித்தாகுக.
அவருக்கு நமது இயக்கத்தின் சார்பில் வீர வணக்கம்.
தலைவர்,
திராவிடர் கழகம்
5-4-2021
குறிப்பு: இறுதி நிகழ்வு இன்று மாலை 4.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.
முன்னதாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் மறைந்த பொறியாளர் ச. முகிலரசு உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
முகவரி : பழைய எண் 15/புதிய எண் 37, அய்ந்தாவது குறுக்குத் தெரு, தீட்டித் தோட்டம், பெரம்பூர், சென்னை-600011 மொபைல் : 73580 59157, 93810 15755
No comments:
Post a Comment