29.04.2021 இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· டில்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிர்கள் பறிபோகும் நிலையில் மோடி அரசு ஆக்சிஜன் விநியோகத்தை ஏன் உரிய முறையில் பகிர்ந்து அளிக்கவில்லை என மோடி அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
· அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை அரசு அளித்திடாமல், தனியார் நிறுவனங்களின் கையில் தடுப்பூசி விநியோகத்தை ஒப்படைப்பது, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே பயன்படும். கரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை இது என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் - சல்மான் அனீஸ் சோஸ் கூட்டாக கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment