ராணுவ ஒத்துழைப்பு அமைதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்: சீனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 7, 2021

ராணுவ ஒத்துழைப்பு அமைதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்: சீனா

பீஜிங், ஏப். 7 நாடுகளுக்கு இடை யிலான ராணுவ ஒத்துழைப்பு அமைதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்று சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியானி கூறினார். 

இந்தியா கடந்த சில ஆண் டுகளாக அமெரிக்கா ஜப் பான் ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் கடற்படைகளுடன் தனது ஒத்துழைப்பை விரிவு படுத்தி வருகிறது.

அந்த வகையில் கிழக்கில் இந்திய பெருங்கடலில் பிரான்சு நாட்டு கடற்படையுடன் குவாட் உறுப்பு நாடுகளான இந்தியா, அமெரிக்கா ஜப் பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற் படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்திய பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத் துக்கு பதிலளிக்கும் விதமாக இந்த பன்னாட்டு கூட்டு கடற் படை பயிற்சி நடப்பதாக பன் னாட்டு நோக்கர்கள் கருது கின்றனர். இந்த நிலையில் சீன தலைநகர் பீஜிங்கில் பத்திரி கையாளர்களை சந்தித்த அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர் பாளர் ஜாவோ லிஜியானிடம் இந்த கூட்டு கடற்படை பயிற்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத் துழைப்பு பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம் என பதிலளித்தார்.

No comments:

Post a Comment