தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா 7ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வீட்டுக்கு வீடு சோதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 6, 2021

தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா 7ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வீட்டுக்கு வீடு சோதனை

சென்னை, ஏப். 6 7ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டுப் பகுதிக ளுக்குள் வீட்டுக்கு வீடு சென்று, காய்ச்சல் சோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத் துறைச் செயலா ளர் இராதாகிருஷ்ணன் பேட் டியளித்துள்ளார்.

தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் . ராதாகிருஷ்ணன் சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று (5.4.2021) செய்தியாளர்க ளைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘’நாட்டில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவந்த நிலையில், முதன்முறையாக அன்றாட கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, ஒரு லட்சத் தைத் தாண்டியுள்ளது. தமிழ் நாட்டிலும் இந்த எண் ணிக்கை படிப்படியாக அதி கரித்துக்கொண்டே இருக்கி றது. மகாராட்டிரா, மும்பை, சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய இடங்களில் உள்ள நோய்த் தொற்றின் அளவுக்கு இல்லாவிட்டாலும்கூட, தமிழ்நாட்டிலும் அச்சம் தரும் வகையில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

பரிசோதனை, கரோனா நோயாளிகளை அடையா ளம் காண்பது, தனிமைப்படுத் துதல் ஆகியவற்றை முறை யாக மேற்கொண்டு வருகி றோம். 7ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக் குள் வீட்டுக்கு வீடு சென்று, காய்ச்சல் சோதனை மேற் கொள்ளப்படும். தேர்தல் காலத்தில் தேவையற்ற குழப் பத்தை ஏற்படுத்தும் என்ப தால் வாக்குப் பதிவுக்குப் பிறகு இதைத் தொடங்கு வோம். உள்ளாட்சி, வருவாய் மற்றும் சுகாதாரத் துறை யினர் இணைந்து முழு வீச் சில் இந்தப் பணிகளைத் தொடங்க உள்ளனர்.

4.5 லட்சம் குடியிருப்புப் பகுதிகளில் 925 நோய்க் கட் டுப்பாட்டுப் பகுதிகள் கண் டறியப்பட்டுள்ளன. அங்கு கட்டுப்பாட்டு மய்யங்களை அமைத்து, தன்னார்வலர்கள் மூலம் பொருட்களை விநி யோகம் செய்யவும், அவர் களை முழுமையாகப் பரிசோ தனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல தொற்றைக் குறைக்கக் களப்பணியாளர் கள் குழுக்களும், கண்காணிப் புக் குழுக்களும் முழு வீச்சில் செயல்படும். தற்போது 3 ஆக உள்ள கரோனா தொற்றை உறுதிப்படுத்தி, மருத்துவ மனைக்கு அழைத்துச் செல் லும் மய்யங்கள் 10 ஆக உயர்த்தப்படும். காய்ச்சல் முகாம்களும் முழுவீச்சில் தொடங்கப்பட உள்ளன’’.

இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment