புதுடில்லி, ஏப்.6 லஞ்ச ஒழிப்பு பிரிவுகளில் ஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து மத்திய அரசுத் துறைகளுக்கும் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முக்கியமான பொறுப்புகள்
மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம், அனைத்து மத்திய அரசுத் துறை செயலாளர்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவ னங்களின் தலைமை அதிகாரிகளுக்கு நேற்று (5.4.2021) அனுப்பிய உத்தர வில் கூறியிருப்பதாவது:- லஞ்ச ஒழிப்பு பிரிவு அல்லது லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்புகள் மிகவும் முக்கியமா னவை. அம்மாதிரியான பொறுப்பு களில் ஒரு அலுவலர் ஒரே இடத்தில் தேவையின்றி நீண்ட காலம் பணி புரிவது, தனிப்பட்ட விருப்பங்களை வளர்த்துக்கொள்ள வழிவகுக்கும். அவர்கள் மீது தேவை யற்ற புகார்கள், குற்றச்சாட்டுகளும் எழக்கூடும்.
அதிகபட்சம் 3 ஆண்டுகள்
இந்த விடயத்தின் முக்கியத்துவம் கருதியும், வெளிப்படைத்தன்மை, அணுகுமுறையில் ஒரேமாதிரியான நிலை போன்றவற்றை உறுதிப் படுத்தவும், லஞ்ச ஒழிப்பு ஆணையம் அதன் முந்தைய வழிகாட்டு முறையில் மாற்றம் செய்யத் தீர்மானித்துள்ளது.அதன்படி, லஞ்ச ஒழிப்பு பிரிவில் உயர் அலுவலர்கள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை ஒரே இடத்தில் பணிபுரிவதற்கான காலம் 3 ஆண்டு களாக வரையறுக்கப்படுகிறது.லஞ்ச ஒழிப்பு பிரிவில் ஒரு இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மேலும் 3 ஆண்டுகாலம் அதே பிரிவில் பணியாற்ற அனுமதிக்கப்பட லாம். ஆனால் அவர்கள் வேறு இடத் துக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும்.
கட்டம் கட்டமாக
அவ்வாறு இடமாற்றம் செய்யும் போது, அதிக காலம் பணிபுரிந்தவர்கள் என்ற வரிசை அடிப்படையில் கட்டம் கட்டமாக மாற்றம் செய்ய வேண்டும். அதில் ஒரே இடத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் முதலில் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.ஒரு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் இருந்து ஒருவரை வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்தால் மறுபடி அவரை லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணிபுரிய அனுமதிப்பதற்கு 3 ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment